Friday, August 16, 2013

விவாதத்திற்கு தயாரா ?


இந்திய தேசத்தின் சுதந்திர தினமான நேற்றைய தினம் இந்திய விடுதலையில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன ? இஸ்லாமிய பெண்களின் பங்கு என்ன ? என்பதையெல்லாம் விவரிக்கும் முகமாக இரண்டு மூன்று பதிவுகளை நாம் வெளியிட்டிருந்தோம். அந்த பதிவுகளில் நாம் பில்டப் செய்து பொய் செய்தி வெளியிட்டதாக காவிகள் விஷம பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வரலாறுகளை பற்றி கருத்து கூற விரும்புபவர்கள் வரலாற்றின் பக்கங்களை புரட்டிவிட்டு கருத்து கூறினால் நன்றாக இருக்கும். வரலாறு என்றால் என்னவென்றே தெரியாமல்... ஏதோ எழுதுவதற்கு இடம் கிடைத்து விட்டது என்பதற்காக மனம் போன போக்கிலே எழுதுவது முட்டாள் தனமானதாகும். நாம் வெளியிட்ட பதிவில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன, முஸ்லிம் பெண்களின் பங்கு என்ன என்பதையெல்லாம் ஆதாரத்தோடு நிரூபிக்க நான் தயார். நான் சொன்னது பொய் என்று நிரூபிக்க அவர்கள் தயாரா ? இன்னும் சொல்ல போனால்... 1) இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவின் மக்கள் தொகையில் இஸ்லாமிய மக்களின் சதவீதம் எவ்வளவு... தம்முடைய சதவீதத்தை தாண்டி இந்தியாவில் முஸ்லிம்கள் தேசத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள், இரத்தம் சிந்தினார்கள், சிறை சென்றார்கள், தம்முடைய சொத்து சுகங்களை எல்லாம் நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக அற்பணித்தார்கள். 2) வெள்ளிகிழமையிலே முஸ்லிம்களின் சிறப்பு தொழுகையின் போது நிகழ்த்தப்படும் உரையில் கூட நாட்டின் விடுதலை பற்றி தான் உரை நிகழ்த்தி அனைத்து முஸ்லிம்களின் இரத்த நானங்களிலும் விடுதலை உணர்வை ஊக்குவித்தார்கள். பள்ளிவாசலில் செய்த அளவிற்கு மற்ற மத ஆலையங்களில் செய்திருப்பார்களா ? 3) ஆங்கிலத்தின் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கற்ப்பது இஸ்லாத்தில் ஹராம் (மதத்தில் தடுக்கப்பட்டது) என்று முஸ்லிம் தலைவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். 4) வ.ஊ.சி கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்கி கொடுத்து அந்த கப்பலை ஓட்ட கற்றுகொடுத்தவர் வள்ளல் பக்கீர் முஹம்மது. அந்த காலத்தில் 60 ஆண்டுகளுக்கு அந்த கப்பலின் விலை பல லட்சம் என்றால் இந்த காலத்தில் அதன் மதிப்பு பல கோடியாகும் 5) நேதாஜி அமைத்த படைகளுக்கு இந்தியா முழுவதும் வசூல் செய்து 25 ஆயிரம் கூட வசூல் ஆகாத நிலையில் வள்ளல் ஹபீப் முஹம்மது மட்டும் 1 கோடி ருபாய் கொடுத்தாரே... இன்றைய தினத்தில் அதன் மதிப்பு பல கோடியாகும். 6) சுதந்திர போராட்டத்தின் போது பீரங்கியை அறிமுகம் செய்தாரே திப்பு சுல்தான் அது உண்மை இல்லையா ? 7) தனது இரண்டு மகன்களின் தலையை நாட்டிற்காக அர்ப்பணித்தாரே பகதூர் ஷா அது உண்மை இல்லையா ? 08) அரசியாக வாழ்ந்த ஹஜ்ரத் பேகம் அறவழியில் போராடி காட்டில் மரணித்தாரே அது உண்மை இல்லையா ? 9) தம்முடைய தேசத்தை வளமாக்க தம்முடைய உடலை உரமாக்கினாரே மருதநாயகம் அது உண்மை இல்லையா ? 10) காயிதே மில்லத் அவர்கள் தம்முடைய பட்டங்களை எல்லாம் தூக்கி வீசினார்களே அது உண்மை இல்லையா ? இப்படி இந்நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் தம்முடைய சதவீதத்தை விட அதிகமாக அர்ப்பணித்துள்ளார்கள். நான் சொன்ன செய்திகள் அனைத்தும் பொய் என்று விஷம பிரச்சாரம் செய்தீர்களே... நான் சொன்னவைகள் உண்மை இல்லை பொய் என்று ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா ? விவாதத்திற்கு வருகிறீர்களா ? லட்சகணக்கான பாமர மக்கள் பங்கு கொண்டிருக்கும் இதே முகநூலில் விவாதம் மேற்கொள்வோமா ? அப்பாவி பொதுமக்கள் மத்தியில் நஞ்சை விதைக்க முயற்சிக்கிறீர்களே... விவாதத்திற்கு வாருங்கள்.. வரிக்கு வரி பதில் கொடுத்து உண்மைகளை உலகுக்கு கொண்டு செல்கிறேன். விவாதத்தின் போது இதை விட நூற்றுகணக்கான செய்திகளை நாட்டு மக்களுக்கு பறைசாற்றுகிறேன். அதுவே நான் சொன்னவைகள் பொய் என்று நிரூபித்து விட்டால் எந்த தேதியில் நீங்கள் நிரூபிக்கிறீர்களோ அதே தேதியில் நான் முகநூலை விட்டே வெளியேறுகிறேன். விவாதத்திற்கு தயாரா ? சவாலுக்கு நான் தயார்... நீங்கள் தயாரா ?

0 comments:

Post a Comment