Sunday, August 11, 2013

கூடங்குள மின் உற்பத்தி


கூடங்குள மின் உற்பத்திக்கு எதிராக பலர் பல கருத்துக்களை வெளியிடும்போது ஒருவர் வித்தியாசமாக கூடன்குளம் தான் வீட்டுக்கே தேவை இல்லை என்று செயலில் காட்டியுள்ளார். பழைய வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையால் எங்களை அணுகிய அவர் தன்வீட்டு மொத்த மின் தேவைக்குமான மின்சாரத்தை சோலார் மூலம் தயாரிக்கவேண்டும் என்று சொன்னார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அவர், பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை-நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர். ஆனால் இயற்கையை காயபடுத்தகூடாது என்னும் உறுதியுள்ளவர். ஒரு திட்டத்தை மறுக்கும்போது அதற்கான மாற்றுவழியையும் காட்டி மறுக்க வேண்டும். சும்மா பேசிகொண்டிருக்காமல் செயலில் காட்டலாம் என்றுதான் இந்த ஏற்பாடு. இப்போது எங்கள் வீட்டு தேவைக்கான மொத்த மின்சாரத்தையும் சோலார் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து கொள்கிறோம். என் வீடு மின் தேவையில் தன்னிறைவு அடைந்து விட்டதால் எனக்கு அரசின் அணுமின்சாரம் தேவை இல்லை என்கிறார். ரூ. 37,500.00 செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த சோலார் யுபிஎஸ் தினமும் சுமார் 1.5 அலகு மின்சாரம் தயாரிப்பதால், நிலக்கரி மின்சாரம் கணக்குப்படி 3 கிலோ கார்பன்டை ஆக்சைடு வெளியீடு தடுக்கபடுகிறது என்பது கூடுதல் தகவல்.

0 comments:

Post a Comment