Sunday, August 11, 2013

எங்களுக்கு எப்ப உலகம் தெரியப் போகுது !


யாழ்ப்பாணத்தில் இன்று முதல் மழை. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் குண்டா கருப்பா அசல் யாழ்ப்பாணத்து முகத்தோட ஒரு பெடியன் வந்து அண்ணை போன்ல பலன்ஸ் இருக்கா எண்டு கேட்டான் ,நானும் நம்பர் அடிச்சு குடுத்தன்,போன் எடுத்து நான் அஜந்தன் கதைக்கிறன் அண்ணை எண்டான் ,(அவன் அண்ணை எண்டு கூப்பிடேக்க அப்பிடியே வந்து ஓட்டுறான் ,அப்பிடியொரு வசியமிருந்தது) இண்டைக்கு தான் புது வேலைக்கு வந்தனான் எண்டான் . மழை . பிறகு கேட்டன், வீட்டுல எத்தன பேர் ?... அப்பா அம்மாவோட சேர்த்து ஏழு பேர் ,நீ எத்தனையாவது பிள்ளை ? முதலாவது அண்ணை ! எத்தின வயசு ? பதினெட்டு அப்பா ? கூலி . எவ்வளவு வரும் ஒரு நாளைக்கு ? ஆயிரத்து நூறு ..இருநூறு . காணுமா,இல்லாட்டி ? கல் உடைக்க போறவர் ஒரு நாளைக்கு ? இல்லை அண்ணை ,ஒரு லோட் உடைச்சா ஆயிரத்து ஐநூறு . (நான் இப்ப தான் யாழ்ப்பாணத்துல கல் உடைக்கிற வேலை இருக்கெண்டு அறிஞ்சன் ) அம்மா ? வயல்ல அறுப்பு வேலைக்கு போவா ஏன் பள்ளிக்கூடம் போகல்ல ? வீட்ட கஷ்டம் அண்ணை . எத்தனையாவது வரைக்கும் படிச்சனீ ? பத்தாம் ஆண்டு ..... (மறுபடியும் போன் ) வேலைக்கு ஆள் எடுத்தாச்சாம் அண்ணை (,சோகமே இல்லை அவன்ட முகத்துல ) சரி என்ன செய்ய போரை? வரேக்க நூறு ரூபா கொண்டு வந்தனான் ,அதுவும் தேங்காய் அதுகள் வாங்க வச்சிருந்த காசு .பஸ் போக வர எண்பது ,அம்மாட்ட வரேக்க வேலைக்கு போனா காசு கொண்டு வாறன் எண்டு சொன்னன், மழை . சரி தம்பி வா நீ போக வேண்டிய இடத்துக்கு கூட்டிக் கொண்டு பொய் விடுறன் . சரி இதில்லாட்டி என்ன செய்வ ? சாப்பாடு கடை ஒண்டு கேட்டவை அண்ணை பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால , சரி சம்பளம் ? பன்னெண்டு தருவாங்கள் ஆனா அங்கயே நிக்கோணும் ,வேற ஒரு வல கடைல கேட்டவங்கள் ,ஆனா முதல் மாசம் சம்பளம் இல்லையாம் . (வேற ஒண்டும் நான் கேக்கேல்ல ) கடைசியா போன், அவன கொண்டு போய் விட்டுட்டு வந்தன் .. எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன என்னை பற்றி நான் அவனுக்கு காசு குடுக்க நினைச்சன் ,ஆனா அது பிச்சையா போய்விடும் அதனால என்ன கட்டுப்படுதிக்கிட்டன் . பிறகு நான் அவன சரியான இடத்தையா கொண்டு போய் சேர்த்தன், என்னை பொறுத்த வரைக்கும் இல்லை . இண்டைக்கு தலைவா வெளியிட, வாசல்ல வெடியெல்லாம் கொளுத்தி பறையடிச்சு வாழை மரம் கட்டின எங்கள் சக சமுதாயம் எப்ப உலகத்த தெரிஞ்சு கொள்ள போகுது . நாங்க எப்பவும் சுயனலமிகளாய் வாழ்ந்தே பழகிட்டம் , எனக்கு மேல பெய்யும் மழை இப்பொழுது குத்துகிறது .

0 comments:

Post a Comment