சுதந்திர தின உரையில் தனிப்பட்ட நபரை பற்றி விமர்சனம் செய்வது சரியல்ல என்று மோடியை அத்வானி சாடி பேசியுள்ளார்.
குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் மோடி, கலந்து கொண்டு மத்திய அரசினையும், பிரதமரையும் தாக்கி பேசினார்.
இந்த நிலையில் இன்று புதுடெல்லியில் தனது இல்லத்தில் சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய அத்வானி...
சுதந்திர தினத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி தான் மக்களிடம் பேச வேண்டும். அதை விடுத்து தனிப்பட்ட ஒருவரை விமர்சித்து இந்த சுதந்திர நாளில் பேசுவது சரியல்ல என மோடியின் பேச்சிற்கு அத்வானி தனது கண்டிப்பை வெளியி்ட்டார்.
0 comments:
Post a Comment