Friday, August 16, 2013

இந்தியர்களின் முழக்கம்......!!


இங்கே ஆயிரம் குறைகளிருந்தாலும், எங்கும் வறுமை நிறைந்திருந்தாலும், எங்கள் நாடு எங்களுக்கு எல்லா நாட்டினும் உயர்ந்ததே. இங்கே ஊழல்கள் மலிந்திருந்தாலும், மக்களைச் சுரண்டுவோர் அதிகரித்தாலும், பொய்கள் பேசி வஞ்சித்தாலும், தீமைகளுக்கு எதிராய்ப் போராடுவோம்; தேசத்தின் புகழைப் பாடுவோம். தீய சக்திகளை வேரறுப்போம்; மக்கள் சக்தியை ஒருங்கிணைப்போம். இதன் விரோதிகள் எங்கள் விரோதிகள்; இதன் நண்பர்கள் எங்கள் நண்பர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர்; தாய்த்திரு நாட்டுக்கு துரோகம் செய்வோர்; இவர்கள் களைகள்; இவர்களைக் களைவோம். எங்கள் உழைப்பு நாட்டை உயர்த்தும்; எங்கள் சிந்தனை நாட்டைத் திருத்தும்; எங்கள் எழுத்துக்கள் வழிகாட்டும்; எங்கள் எழுச்சி நாட்டைக் காக்கும். நாங்கள் சோர்வடைவதில்லை; பொய்மைக்கும் வஞ்சகத்திற்கும் பணிந்து போவதில்லை; அடக்குமுறைகளுக்கும் அராஜகங்களுக்கும் அஞ்சி நடுங்குவதில்லை. போராடுவோம்; போரும் தொடுப்போம். இது இந்தியர்களின் முழக்கம்; இது என்றும் ஓயாது முழங்கும்.

0 comments:

Post a Comment