
கோவையில் காவல்துறை வாகனம் மோதி 16 மாத முஸ்லிம் குழந்தை பலியாகியுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது...
வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலானாய்வு குழு காவல்துறையினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை தெற்கு உக்கடத்துக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக, காவல்துறை உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் அண்ணா நகர் பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது காவல்துறை சென்ற ஜீப் ஒன்று அப்பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் 16 மாத குழந்தை ஆஷிப் ரகுமான் மீது மோதியது. பலத்த காயமடைந்த குழந்தையை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)
இச்சம்பவத்த்தினால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து உக்கடம் “பைபாஸ்” ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பிரவேஸ்குமார் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினார். விபத்து ஏற்படுத்திய போலீஸ் ஜீப் டிரைவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
0 comments:
Post a Comment