ஆன்லைன் வேலை வேண்டுமா?

நீங்களும் படுகை வாருங்கள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்யலாம்.

பெண்களுக்கு உகந்தது ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தே வேலை செய்வதால் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்ள முடிகிறது.

ஆன்லைன் ஜாப் பயிற்சிகள்

ஆன்லைன் வேலை என்றால் என்னவென்றே தெரியாத நான், எளிதாக வீட்டிலிர்ந்தே கற்றுக் கொண்டு வேலை செய்கிறேன்.. நிறைய சம்பாதிக்கிறேன்.

விரும்பும் நேரத்தில் பணி

ஆன்லைன் என்பதால் எப்பொழுது நமக்கு நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது கம்ப்யூட்டரை ஆன் செய்து வேலை செய்யலாம்.

மாதம் ரூ.35,000/- சம்பாதிக்கலாம்

வேலைகள் எல்லாமே மிகவும் எளிமையானது மட்டும் அல்லாமல், விரும்பிச் செய்தால் தினம் தினம் ரூ.1000 சம்பாதித்துக் கொள்ளலாம். அதுவும், காப்பி பேஸ்ட் வொர்க்கில் கூட அவ்ளவு சம்பாதிக்கலாம்னா பார்த்துக்கோங்க.

Wednesday, July 24, 2013

திருவண்ணாமலை ஒரு அறிமுகம்:


திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. *சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. *பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது. திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது. *1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகவும் தரம் உயர்த்தப்பட்டது. திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும். சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். பிற தலங்களில், சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும். திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இது தவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும். இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது. இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர். இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:


உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்.. உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும். பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும். காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும். காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

Monday, July 22, 2013

காய்ச்சல் கிட்ட நெருங்காது!


தலா 20 கிராம் வல்லாரை இலை, துளசி இலை, உத்தாமணி இலை - இந்த மூன்று இலைகளையும் பச்சையாக அரைத்து கெட்டியாக மெழுகு பதத்தில் வரும்போது, மாத்திரைப் போல் உருட்டி நிழலில் உலர்த்தி காய வையுங்கள். நன்றாகக் காய்ந்ததும், பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். காலை இரண்டு மாத்திரையும், இரவில் இரண்டு மாத்திரையும் பாலில் கலந்து சாப்பிடுங்கள். இதுபோல் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 64 விதமான காய்சலும் தீரும். இதற்கு எந்தப் பத்தியமும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

Sunday, July 21, 2013

கார்ட்டூன் பேசுகிறது


இந்த ஒரு படம் சொல்லும் ஓராயிரம் கருத்து புரிகிறதா நண்பர்களே சிந்தித்து செயல்படுவோம் இயற்கைச்சூழல் காப்போம் மனித சந்ததிக்கு வளம் சேர்ப்போம்……!!!

சிந்திக்க வேண்டிய தருணம் !!


உலகில் அசிங்கமான தற்போதைய கட்டடம் !! அடுத்த இடத்தை எந்த கட்டடம் பிடிக்கும் ?


உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க, அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வடகொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஓட்டலை காட்டுகின்றன அந்த ஊர் பத்திரிகைகள். வடகொரியா, பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஓட்டல். கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட்டடம் எனக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஓட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 1992 ஆம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டன. இதில் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரம் அறைகள் ஏதோ தேவதை கதைகளில் வரும் ஆச்சரிய குகைகள் போல காட்சியளிக்கின்றன. பல வருடங்களாக பூசப்படாமல் சுவர்கள் இற்றுப்போய் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் இது இன்று நின்று கொண்டிருக்கிறது. இந்த ராட்சத கட்டடத்தை இரவில் பார்க்கத்தான் துணிச்சல் அதிகம் வேண்டும். இந்த கட்டடம் என்றைக்காவது பூர்த்தியாகுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வட கொரியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும், சுற்றுலாப் பயணிகள் மருந்துக்குகூட எட்டிபப் பார்க்க வாய்ப்பில்லாத பகுதி பியாங்யாங் என்பதாலும் மாற்றம் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.முதலீடாக போடப்பட்ட கோடிக்கணக்கான பணம் வெறும் வெத்து கட்டடமாக நிற்பது கொடுமைங்க. உலகில் அசிங்கமான கட்டிடம் என்ற இரண்டாவது இடத்தை எந்த கட்டிடம் பிடிக்கும் ? அது கண்டிப்பாக நம்ம சென்னையில் உள்ள புதிய தலைமை செயலகம் தான் பிடிக்கும் என்பதில் எவ்வளவும் சந்தேகம் இல்லை இப்பவே அந்த கட்டிடத்தில் பாம்புகள் நிறைய குடியேறிவிட்டது .இருள் அடைந்து காணபடுகிறது என்று எல்லாம் சில பத்திரிக்கையில் செய்திகள் வந்தது தற்போது கட்டிடத்தின் மேல் கண்ணாடிகள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கிறது . 1200 கோடி செலவு செய்து இப்படி பரிதாபத்துடன் நிற்கும் கட்டிடத்தை பார்க்கும் போது வருத்தமடையாத மக்கள் யாரும் இருக்க முடியாது .குழந்தைகள் மருத்துவமனை வரபோகிறது என்று அறிவித்தார்கள் அதுவும் வந்த பாடு இல்லை . அதற்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது மொத்தத்தில் கட்டிடமும் வீனாகிகொண்டு இருக்கிறது . மக்கள் பணமும் வீணாய் போய்விட்டது உலகில் அசிங்கமான கட்டிடம் என்று கண்டிப்பாக இரண்டாவது இடத்தை இந்த கட்டிடம் தான் பிடிக்கும் ….கருத்து தெரிவிற்கும் நண்பர்கள் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் .

இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!


இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாகஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று ‘ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்’. இதனை சுருக்கமாக ‘ரா’ என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் மத கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் . சமிபத்தில் தாண்டவம் என்ற திரை படத்தில் கூட நடிகர் விக்ரம் ரா வில் பனி புரிவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும். அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின. நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த ‘ரா’ அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு ‘ரா’ வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள். இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே

சுவாரசியமான முல்லா குட்டி கதை!!


ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர். சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார். முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

கிரிடிட் கார்டுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் !!!


உங்கள் கிரிடிட் கார்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? மாதம்தோறும் வரும் கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை நம்மில் எத்தனை பேர் படிக்கிறோம்? அல்லது எத்தனை பேருக்கு படித்துப்பார்க்க தெரியும்? பதிலென்னவோ நெகடிவ் தான்.காரணம்? அதை படிப்பதில் ஆர்வமின்மை; அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகள். வெகு சிலரே கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை முழுவதும் படிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. கிரிடிட் கார்டுகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால், பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதோ கிரிடிட் கார்டுகளைப்பற்றி உங்களுக்காக! கிரிடிட் கார்டு எண் (Credit card Number): இது உங்களது பிரத்தியேக எண். இந்த 16 இலக்க எண் கிரிடிட் கார்டின் முகப்பில் சூப்பர் இம்போஸிங் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்டின் அனைத்து பயன்பாடுகளுக்கும் இந்த எண்ணே பிரதானம் என்பதால், இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம். கார்டு தொலைந்து போனால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் செய்ய, கார்டு எண்ணைத்தான் நீங்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, கிரிடிட் கார்டு எண் உடனடியாக நினைவுக்கு வரவில்லை எனில், இது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டிலிருந்து உங்களுக்கு கிடைக்கும். ஸ்டேட்மென்டில், பளிச்சென்று தெரியும் வகையில் ஒரு பிரதான இடத்தில் இந்த எண் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். கிரிடிட் லிமிட் (Credit limit ): இது தான் உங்களது கடன் பெறும் திறன் எனப்படுவது. அதாவது, கார்டை வழங்குகிற வங்கி அல்லது நிறுவனம் எந்த அளவுக்கு உங்களுக்கு கடன் தர இயலும் என்பதைத்தான் இது குறிப்பிடுகிறது. இந்த அளவை அவர்கள் எவ்வாறு வரையறை அல்லது நிர்ணயம் செய்கிறார்கள்? அதற்கான அளவுகோல்கள் என்னென்ன? உங்களது மாத வருமானம் கடனை திரும்ப செலுத்தும் திறன் இதற்கு முன் கடன் பெற்ற இடங்களில் தடையின்றி சரியாக திரும்பச் செலுத்தியிருக்கிறீர்களா? இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில் தான் உங்களது கடன் பெறும் தகுதியை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன. மேற்சொன்ன மூன்றும், உங்களது கிரிடிட் லிமிட்டை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் தன்மை படைத்தவை. வங்கிகள், உங்களுக்கு அனுமதிக்கும் இந்த கிரிடிட் லிமிட்டை இரண்டு பிரிவாக பிரிக்கின்றன. அதாவது, உங்களது மொத்த கிரிடிட் லிமிட்டில் 70 சதவீதத்தை பொருட்கள் வாங்குவதற்கும் மீதமுள்ள 30சதவீதத்தை வங்கிகளின் ஏ.டி.எம்.களிலிருந்து ரொக்க பணமாக பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரொக்கமாக பணம் பெறும் பிரிவில், பெறுகிற பணத்திற்கு 2.50 முதல் 3.00 சதவீதம் வரை டிரான்ஸாக்ஷன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த வசதிக்கு வட்டி வீதமும் அதிகமென்பதால் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்வது நல்லது. வங்கிகள், தங்களது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டுகளில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட், அதில் ‘பொருட்களாக வாங்குவதற்கு எவ்வளவு? ரொக்கக்கடனாக பெறுவதற்கு எவ்வளவு?’ என்கின்ற தகவல்களையும்; ஒவ்வொரு பிரிவிலும் ஸ்டேட்மெண்ட் தேதிப்படி எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைனையும், இன்னும் பயன்பாட்டிற்கு எவ்வளவு மீதமுள்ளது என்பது குறித்த தகவல்களையும் தெளிவாக கூறுகின்றன. ஒருவேளை, இந்த கிரிடிட் லிமிட்டை தாண்டி உங்கள் பயன்பாடு இருக்குமானால், இது போன்ற அதிகப்படியான பயன்பாட்டிற்கு வங்கிகள் அதிக வீதத்தில் வட்டி வசூல் செய்யலாம். சரி, கிரிடிட் லிமிட்டை கடந்து எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றால், அதற்கும் வங்கிகள் ஒரு எல்லையை வைத்திருக்கிறன. அந்த எல்லை எது என்பதனை வங்கிகள் பெரும்பாலும் உங்களுக்கு தெரிவிப்பதில்லை. இந்த எல்லை மீறுதலை அனுமதிக்க மறுக்கும் உரிமையையும் வங்கிகள் தங்கள் வசமே வைத்துள்ளன.அவைலபிள் கிரிடிட் லிமிட் (Available credit limit): அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட்டில் இதுவரை பயன்படுத்தியுள்ளது போக தற்போது மீதியுள்ளது என்று பொருள். உதாரணமாக, உங்களது கிரிடிட் லிமிட் ரூ 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இதுவரையிலும் ரூ 80 ஆயிரம் செலவு செய்திருந்தால் தற்போது மீதமிருக்கும் ரூ 20 ஆயிரம் தான் ‘அவைலபிள் கிரிடிட் லிமிட்’என்று குறிப்பிடப்படுகிறது. பேமென்ட் டியூ டேட் (Payment Due Date ): ஒவ்வொரு மாதமும், நீங்கள் கிரிடிட் கார்டுக்கான தவணையை செலுத்த வேண்டிய தேதி இது. அதாவது, இந்தத்தேதியில் வங்கிக்கு உங்கள் காசோலை அல்ல, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய தேதி. உங்களது காசோலை வங்கியால் பணமாக்கப்படுகின்ற தேதி தான் இந்த பேமென்ட் டியூ டேட் என்பதனால், இந்த தேதியில் பணமாக்கத்தக்க வகையில் உங்களது காசோலை முன்னதாகவே வங்கியை சென்றடையும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்டேட்மெண்ட் டேட் (Statement Date) நீங்கள் கடந்த ஒரு மாதமாக வாங்கிய பொருட்களின் பில்களுக்கான பட்டியல் இது. இதில் உங்களது பயன்பாடு தேதி வாரியாக பட்டியலிடப்படுகிறது. எங்கெங்கெல்லாம் எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமல்ல, வட்டி; கிரிடிட் கார்டுக்கான ஆண்டு கட்டணம்; தாமதத்திற்கான அபராத வட்டி இவையெல்லாமே கூட இந்த பட்டியலில் இடம் பெறுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே சரியானவையா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஏதேனும், தவறான கட்டணங்களோ, பயன்பாடு பில்களோ காணப்படுமானால், அது குறித்து உடனடியாக புகார் செய்ய வேண்டும். மொத்த நிலுவை தொகை (Total amount Due): மொத்த நிலுவை தொகை என்பது குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பெற்றுள்ள மொத்த கடன், அதன் மீதான வட்டி, அபராத வட்டி (பொருந்துமெனில்) இன்னும் என்னென்ன கட்டணங்கள் உண்டோ அனைத்தும் சேர்ந்தது. குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகை (Minimum Amount Due ): ஒவ்வொரு மாதமும், மொத்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் திரும்ப செலுத்தலாம். அந்த குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகை என்பது, மொத்த கடன் தொகையில் 5 சதவீதம். இந்த குறைந்தபட்ச தொகையை மேலே சொன்னபடி சரியான தேதியில் கட்டத்தவறினால், வங்கிகள் தாமதத்திற்கென அபராத வட்டி வசூல் செய்கின்றன. நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்கள் என்றால் மீதமுள்ள நிலுவைத்தொகைக்கு வங்கி வட்டி வசூல் செய்கிறது. இந்த வட்டி வீதம் மிகவும் அதிகமென்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அப்படி ஒவ்வொரு மாதமும் வட்டி மேல் வட்டி என்பது உங்கள் மீது பெரும் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம். எப்படி தெரியுமா? நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்களென்றால், இந்த வங்கிகள் மறுபடியும் வட்டியை மொத்த நிலுவைத்தொகைக்கே கணக்கிடுகின்றன. உதாரணமாக, ஒரு மாதம் நீங்கள் மொத்த நிலுவை தொகையில் 60 சதவீதத்தை திரும்ப செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் கடந்த முறை கட்டாமல் விடப்பட்ட 40 சதவீதத்துக்கு மட்டும் தானே வட்டியை கணக்கிட வேண்டும். ஆனால், மாறாக 100 சதவீதத்துக்குமே வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த வகையில், கடந்த மாதம் நீங்கள் செலுத்திய குறைந்த பட்ச தொகைக்கும் சேர்த்து மீண்டும் வட்டி செலுத்த வேண்டியவராகிறீர்கள். இதைத்தான் ‘கடன் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்’ என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். ரிவார்டு பாய்ண்டுகள் (Reward Points): கிரிடிட் கார்டுகளை அதிக அளவில் நீங்கள் பயன்படுத்தும்படி உங்களை தூண்டுவதற்காக வங்கிகள் கையாளும் வியாபார யுக்தி தான் இந்த ரிவார்டு பாய்ண்டுகள். ஒவ்வொரு முறையும் நீங்கள் கார்டை பயன்படுத்துகிற அளவை பொறுத்து இந்த ரிவார்டு பாய்ண்டுகள் கணக்கிடப்படுகின்றன. உங்களிடம் சேர்ந்துள்ள ரிவார்டு பாய்ண்டுகளை, நீங்கள் அவர்கள் தருகிற ஏதேனும் பொருள்களுக்கு மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு பாய்ண்டுக்கு என்ன பொருளை நீங்கள் பெறலாம் என்று அவர்கள் ஒரு பட்டியலை வைத்துள்ளனர். ஸ்டேட்மென்டில், கடந்த மாதம் எவ்வளவு பாய்ண்டுகள் இருந்தன தற்போது எவ்வளவு பாய்ண்டுகள் பெற்றுள்ளீர்கள்? எவ்வளவு பாய்ண்டுகளை நீங்கள் பொருட்களாக மாற்றிக்கொண்டுள்ளீர்கள்? மீதமுள்ள பாய்ண்டுகள் எவ்வளவு?’ என்ற தகவல்களும் கார்டு ஸ்டேட்மெண்ட்டில் தவறாமல் இடம் பெறுகின்றன. ஆகவே, அடுத்த முறை கார்டு ஸ்டேட்மெண்ட் வந்ததும் அனைத்தையும் படித்துப்பாருங்கள். மோசடிகளை தடுக்கவும் தவறுகளை கண்டுபிடித்து சரி செய்யவும் ஆபத்துக்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இது உதவும்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!


நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையை பராமரிக்கும் இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மன அழுத்தம் போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. கொழுப்பை குறைக்கும்: தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில்குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலைஉண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கானமருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால்அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறானதகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது. நிறைந்துள்ள சத்துக்கள்: 100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட்- 21 மி.கி. நார்சத்து- 9 மி.கி. கரையும் கொழுப்பு – 40 மி.கி. புரதம்- 25 மி.கி. ட்ரிப்டோபான்- 0.24 கி. திரியோனின் – 0.85 கி ஐசோலூசின் – 0.85 மி.கி. லூசின் – 1.625 மி.கி. லைசின் – 0.901 கி குலுட்டாமிக் ஆசிட்- 5 கி கிளைசின்- 1.512 கி விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. காப்பர் – 11.44 மி.கி. இரும்புச்சத்து – 4.58 மி.கி. மெக்னீசியம் – 168.00 மி.கி. மேங்கனீஸ் – 1.934 மி.கி. பாஸ்பரஸ் – 376.00 மி.கி. பொட்டாசியம் – 705.00 மி.கி. சோடியம் – 18.00 மி.கி. துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது. பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது: நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Friday, July 19, 2013

இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழர்!


நீதியரசர் ப. சதாசிவம், இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் இருந்து இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழர், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த காடப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர், விவசாயத்தின் மேல் எல்லையற்ற மரியாதை கொண்டவர், அதன் சான்றாக இவரது இளைய மகன் அவரது சொந்த கிராமத்திலேயே விவசாயம் பார்த்து வருகிறார், இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும் முன்வைக்காத இட ஒதுக்கீட்டு முறையை நீதிபதி நியமனத்தில் கொண்டு வர வேண்டுமென்று வெளிப்படையாக சொல்லி பெரியார் மண்ணின் பெருமையை நிலை நாட்டியவர், ரிலையன்ஸ் எரிவாயு எடுக்கும் முயற்சியில் இறங்கிய பொழுது, அதனை எதிர்த்து தீர்ப்பு வழங்கி, மக்கள் சொத்து மக்களுக்கே என்று உறுதியாக கூறியவர், பெரியார் மண்ணில் பிறந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கும் நீதியரசர் சதாசிவம் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் !

உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீரங்கம் "


கம்போடியாவில் உள்ள " அன்க்கோவர் வாட் " கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை , ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது ! 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது , இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !

அழகிய மணல் சிற்பம் ♥


வாலிபக் கவிஞர்...


வாலிபக் கவிஞர்.... காவியக் கவிஞர் என்றும் அழைக்கப்படும் கவிஞர் வாலி கடந்த 1931 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார். வாலிக்கு பெற்றோர் வைத்த பெயர் ரங்கராஜன். சிறு வயதில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர், ஓவியர் மாலி என்பவரின் மேல் கொண்ட மதிப்பால் தன்னுடைய பெயரை வாலி என்று மாற்றிக் கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். பல பாடல்களுக்கு விமர்சிக்கப்பட்டாலும், அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும், புது விஷயங்களைக் கற்றுக் கொண்டும் ஜனரஞ்சகப் பாடல்களை படைத்த கவிஞர் வாலி எனப் புகழாரம் சூட்டுகிறது திரையுலகம். இன்று அவர் மறைந்திருந்தாலும், காற்று மண்டலத்தில் உலா வரும் அவரது பாடல்கள் என்றென்றும் அவர் புகழை நீடித்து நிற்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆப்பிள் என்ன சத்துக்கள்??


புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், வைட்டமின் A-B1-B2 மற்றும் சி ஆகியவை உள்ளன. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் ஆப்பிள் பழத்தில் பெக்டின், பாலிபினால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை தடுத்து ஆக்ஸிஜனேற்றம் அடைவதற்கான அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (LDL) கொண்டுள்ளது பலனகள் நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. சருமத்துக்கு மிகவும் நல்லது. பொலிவான‌ உடல் தோற்றத்தையும் ஆரோக்கியமான உடல் நலனையும் தரும் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு ஆப்பிளை கட்டாயமாக சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது. பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது. வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. குடலில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தைஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்

ஆப்பிள் ஐபோன் வெடித்தது, இளம்பெண் மரணம்! ! ! !


சில நாட்களுக்கு முன்பு தான் 18 வயது இளம்பெண் தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த சாம்சங் காலக்ஸி எஸ்3 வெடித்தது.இது அவரது தொடை பகுதியில் பெருத்த காயத்தை உண்டாக்கியது. இதே போல் இளைஞர் ஒருவருடைய சாம்சங் காலக்ஸி எஸ்3 மொபைல் அவர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது வெடித்தது. இப்பொழுது அண்மையாக வாங் ஹாய் என்ற இளைஞருடைய ஆப்பிள் ஐபோன்4 மொபைல் வெடித்தது. அவர் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது ஆப்பிள் ஐபோன்4 மொபைல் வெடித்துள்ளது. வாங் ஹாய்ன் தலைக்கு அருகில் தான் அவரது ஆப்பிள் ஐபோன்4 இருந்ததாம். வெடித்த ஐபோனின் அருகில் தான் படுத்து இருந்ததை நினைத்தாலே மிகவும் கொடுமையாக உள்ளது என அவர் கூறினார். மா எய்லுன் என்ற 23 வயது சீன பெண்தனது ஆப்பிள் ஐபோன் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கையில் போன் பேசியுள்ளார். அப்பொழுது அவர் எதிர்பாராத விதமாக இறந்துவி்ட்டார். அவர் பேசி்க்கொண்டிருக்கையில் அவரது கழுத்து பகுதியில் எலக்டிரானிக் இன்ஞ்சுரி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தான்அவர் இறந்து விட்டதாகவும் இதை விசாரித்த காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது தங்கை டிவிட்டரில், ஆப்பிள் ஐபோன்களை சார்ஜ் ஏற்றும்பொழுது பயன்படுத்த வேண்டாம் என்றும் ஸ்மார்ட்போன்களைகவனமாக பயன்படுத்துமாறும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!!!!


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட . மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது . இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது . இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது. Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன . மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம். நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங் . தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்

சீனி அவரைக்காய் (எ) கொத்தவரங்காய்


என்ன சத்துக்கள்? நார்ச்சத்து, புரதச் சத்து, மற்றும் அமினோ அமிலங்கள் இதிலுள்ளது. பலன்கள் சர்க்கரை நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் அதனுடன் பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. நார்ச்சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாமல், மலத்திற்குப் போய் உடம்பிற்கு வெளியே போய் விடுகிறது.

மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழர் V.A. சிவா அய்யாதுரை..


புறாவைப் பயன்படுத்தி தூது அனுப்புவது முதல், அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்துகொண்டே வந்தது. கணினி என்ற ஒரு வஸ்துவை கண்டுபிடித்த பிறகு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்த முடியவே இல்லை.. கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும் அதனுடைய வளர்ச்சி வேகம் இருமடங்காகியது என்றால் அது மிகையாகாது. அதுவும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருள்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டது. அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையும் ஒன்று. இந்த மின்னஞ்சல் சேவையை gmail உட்பட பல்வேறு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக அளிக்கின்றன. தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகத்தில் முக்கியமான அலுவலக கோப்பு பரிமாற்றங்கள் முதல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்த அளவிற்கு மின்னஞ்சலின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலை கண்டுப்பிடித்து தகவல்தொடர்பு உலகிற்கு அர்பணித்தவர் ஒரு தமிழர் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா? ஆம் நண்பர்களே..! மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அதனை முதன் முதலாக உலகிற்கு அளித்தவர் ஒரு தமிழரே! அப்போது அவருக்கு வயது வெறும் 14 தான். V.A. சிவா அய்யாதுரை என்ற பெயர்கொண்ட இவர்தான் பயன்மிக்க மின்னஞ்சலை உருவாக்கியவர். மின்னஞ்சலைக் கண்டுபிடித்தபோது இவருக்கு பதினான்கு வயது மட்டுமே.. ஆச்சர்யமாக இருக்கிறதா? மிகவும் இளவயதிலேயே இச்சாதனையை இவர் நிகழ்த்தியிருக்கிறார். பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம் நாள்தான் முறையாக இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமையைப் பெற முடிந்தது. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்த இந்த வியத்தகு கண்டுபிடிப்பிற்கு பலரும் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது வேறு கதை. மாணவப்பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமைப் பெற நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டார். இதைப்போன்ற கஷ்டகாலம் மற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இவர் இன்னொவேஷன் கார்ப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையும் அறிவித்திருக்கிறார். இன்றைய நிலையில் பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான, சிவா அய்யாதுரை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் MIT யில் விரிவுரையாளரும் கூட. அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா அவரை கௌரவித்து சிறப்பித்து பாராட்டியிருக்கிறது. இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும், திரு. வி.ஏ. சிவா அய்யாதுரையே உங்களின் நினைவுக்கு வருவார் என நினைக்கிறேன். இன்று அனைவராலும் பயன்படுத்துக்கூடிய, மிகச்சிறந்த என்று அழியாத ஒரு கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி, உலக மக்களுக்கு வழங்கிய திரு. சிவா அய்யாத்துரை அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்..

Wednesday, July 17, 2013

சோளம்

சோளம் ஒரு புல்வகை. வெண்சோளம், சிவப்பு சோளம், என்று இரண்டுவகையிருக்கின்றன‌. சோளம் முற்றாத போது பால் கொண்ட தானியமாக இருக்கும். சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி என்று சோளம் தான் கிராம மக்களின் எளிமையான உணவு. சோளத்தோசையின் மிகவும் ருசியாக இருக்கும். ... ஒரு எளிமையான ரெசிபி - சோளக் கஞ்சி தேவையானவை சோளம் - 1 கப் கேரட் & பீன்ஸ் - 200 கிராம் பட்டாணி - 50 கிராம் எண்ணெய் - 1 ஸ்பூன் தண்ணீர் - 3 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை காய்கறிகளை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் சோளத்தை வறுத்து ஆற வைத்து மிக்சியில் ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும் அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை போட்டு 5 நிமிடம் வதக்கவும் மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கொதி வந்ததும் பொடித்த சோளத்தை போட்டு கைவிடாமல் கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோளம் வெந்ததும் இறக்கி பரிமாறவும். இந்தக் கஞ்சி மிகவும் சத்தானது.

Tuesday, July 16, 2013

கீரைகளும் மருத்துவப் பயன்களும்! ! ! !


கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை: இருமல் குணமாகும் புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும். அறுகீரை: சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்.

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!!


‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு. அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது. வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது. காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும். பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது. நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!..

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்! ! ! !


• மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால்தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும். • காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும். • தானாக "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும். • கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன்படுத்தினால்மின்சாரம் மிச்சமாகும். • கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பற்பட்டு ஸ்க்ரீன் சேவரில் போட்டு வைப்பதால் மின்சாரம் பெரிய அளவில் விரயமாகும். • ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி ஃபில்டரை மாதாமாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம். • ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும். • நீண்ட நாள்களுக்கு வெளியூருக்குச் சென்றால் ஃபிரிட்ஜை அணைத்துவிடுவதன்மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். • பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும். • பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர் என அனைத்தையும் அணைத்தபிறகே அறையைவிட்டு வெளியேறுங்கள். • கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது என திட்டமிட்டால் மின்சார செலவு குறையும்.

அழகிய மண் சிற்பம்!


மின்சாரம் தேவையில்லை !!!!


செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது. செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது. அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர். பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும். அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும். வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார்.

உயிரும் உடலும் ......


உயிரும் உடலும் நலமாக இருக்க நாம் சத்தான உணவு உண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் எதை சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது என்ற கேள்விகளும் நம்மிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. எதை சாப்பிட வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்ற அறிதல் இருந்தால் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழலாம் என்ற புரிந்துணர்வை இப்புத்தகம் ஏற்படுத்துகிறது. நிறம், மணம், கார்ப்பு என மூவகை குணம் கொண்ட வெற்றிலையை நாம் ஒதுக்கி வைத்துவிட்டோம். வெற்றிலையை போடுவதற்கு ஒரு முறை உண்டு என்று அதை விளக்கியுள்ளார் .வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தண்ணீருடன் புகட்டினால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை சரியாகிவிடும் என்று வெற்றிலைப் பற்றி இத்தனை விஷயங்களா என்று வியக்க வைக்கிறார் ஆசிரியர். மேலும் இயற்கையிலேயே நமது உடலில் நிறநிதிருக்கும் நோய் எதிர்க்கும் ஆற்றலோடு இயற்கை உணவான அரிசி, வெற்றிலை காய் கனிகள் கோதுமை காற்று நீர் கிழங்குகள் கீரைகள் எனப் பல உணவுப் பொருட்களின் அரிய சக்திகளும் கலக்கும்போது, நீண்டகாலம் வாழ்வதற்குத் தேவையான ஆற்றல் நமக்கு எளிதில் கிடைக்கிறது என்று ஆசிரியர் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளந்தெளிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு உணவு வகைகளிலும் என்ன மருத்துவ பலன்கள் உள்ளன என்பதை தெரிவிக்கும் நூலாக இது உள்ளது. அறுசுவை உணவும் அதற்கான அரிய பலன்களையும் பட்டியலிடுகிறார். சுவை, ருசி, பசி இவற்றுக்காக மட்டும் நாம் சாப்பிடுவதில்லை. நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்கள் & செல்களின் இயக்கம் மற்றும் உற்பத்தி சரிவர இருந்தால் தான், உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். இயற்கை உணவுகளை சாப்பிடுவத் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. ஆற்றல் உருவாகிறது. நோய் உண்டாவதும் தடுக்கப்படுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் சில கட்டுரைகளில் விளக்கியுள்ளார் ஆசிரியர். நார்ச்சத்தின் தேவை, அது என்னன்ன உணவுப் பொருட்களில் உள்ளது, அதை உட்கொள்வதால் ஏற்படும் பலன்களை தெளிவாகவும் சுவையாகவும் சொல்லியுள்ளார். நம் நாடு முழுவதும் முக்கிய உணவாக ஒத்துக் கொள்ளப்பட்ட கோதுமையின் சிறப்புகளைப் பற்றி சிறப்பாக எடுத்திச் சொல்லியுள்ளார். உடல் சக்திக்காக மட்டுமில்லாமல் அழகுக்காவும் பயன்தரும் உணவு வகைகளைக் கூட வகைப்படுத்தியுள்ளார். இயற்கையின் கொடையான பழங்களைப் பற்றி ஆராய்ந்து எளிய மொழியில் ஒவ்வொரு பழங்களின் சத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார். நம்மில் பலர், தேவையற்ற சில நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நம்புகின்றனர். இது தவறாகக் கருத்தாகும். உள்ளே இருக்கின்ற கபத்தை வெளியே தள்ளும் சக்தி பழங்களுக்குத்தான் உள்ளது. சளி உண்டாவது & எண்ணெய், பால், மாவுப்பொருட்களால்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் முட்டை, பால், தேன், இளநீர்,போன்றவற்றின் சிறப்பை விளக்கி நம் உடலுக்கும் உயிருக்கும் மிகத் தேவையான நீரைப் பற்றியும் ஒரு பகுதியில் எழுதியுள்ளார். உயிர், உடல், உள்ளம் இவை மூன்றிலும் புத்துணர்வை அளித்து இயற்கை உணவே மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்ற கருத்தை இப்புத்தகம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்கிறது.

கும்பகோணம் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் (16.07.2013.


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் (16.07.2013) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு எங்கள் கண்ணீர்க் அஞ்சலி!! கல்வியை கடைச்சரக்காக மாற்றி நீங்கள் வைத்த தீ தாண்டா எம்முடைய 94 குழந்தைகளை கருக்கியது. இன்னும் ஒருவருக்கு கூட தண்டனை தரப்படவில்லை என்பதே நீதியின் கொடுமை!!! கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பள்ளி குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயத்துடன் உயிர்தப்பினர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி உலகையே உலுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ந் தேதி அன்று தீவிபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு குழந்தைகளின் படங்கள் பேனர்களை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Sunday, July 14, 2013

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவற்றில் சில.........


திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன. 4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன. திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன. 1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. 2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும். 3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். 4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். 5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறன. 6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும். 8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய். 9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. 10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். 11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி. 12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார். 13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார். 14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. 15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. 16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார். 17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. 18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம். 19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். 20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார். 21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். 22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள். 23. திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன. 24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது. 25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும். 25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார். 26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன. 27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார். 28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.

பசிப்பிணி மருத்துவன்..!


காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது நடந்த சம்பவம் இது. அந்தப் பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உணவுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவளிப்பார். அந்தச் சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம். ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், "இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்துவிடுங்கள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கேட்டார். பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறினார். ஆனாலும் காமராஜர் அழுது அடம்பிடிக்கவே, கோபமுற்ற பாட்டி அவரை அடித்துவிட்டார். அடிவாங்கினாலும் காமராஜர் சாப்பாடு கட்டித் தரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்லப் பேரனின் பிடிவாதத்தைக் கண்டு மனமிரங்கிய பாட்டி, தினமும் மதிய உணவைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். நாட்கள் சென்றன. பாட்டி, ஒருநாள் பள்ளிக்குச் சென்று மதியவேளையில் பேரன் எப்படிச் சாப்பிடுகிறான் என்பதை மறைவாக நின்று கவனித்தார். அங்கே, கிழிந்த அழுக்குச் சட்டையுடன் இருந்த ஓர் ஏழைச் சிறுவனோடு தனது உணவைப் பகிர்ந்து உண்டுகொண்டிருக்கும் காமராஜரைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார். இவ்வளவு நல்ல மனம் கொண்டவனை அடித்துவிட்டோமே என்று பாட்டிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. காமராஜரின் உணவைப் பகிர்ந்து கொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும் தண்ணீர் குடித்துப் பசி தீர்த்துக் கொள்பவன். அவனைக் கண்ட காமராஜரின் மனம் பதை பதைக்கவே அவனுக்காக வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்துச் சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். இதனால் அவரது மனம் நிறைவு பெற்றது. இதுதான் அவர் பின்னாளில் தமிழக முதல்வரானபோது மதிய உணவுத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த வித்தாக இருந்தது.

Saturday, July 13, 2013

ஆண்டு விழா கொண்டாடலாம்.


வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம்.எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? 1 ஆண்டு - காகித விழா 2 ஆண்டு - பருத்தி விழா 3 ஆண்டு - தோல் விழா 4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா 5 ஆண்டு - மர விழா 6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா 7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா 8 ஆண்டு - வெண்கல விழா 9 ஆண்டு - மண் கலச விழா 10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா 11 ஆண்டு - எஃகு விழா 12 ஆண்டு - லினன் விழா 13 ஆண்டு - பின்னல் விழா 14 ஆண்டு - தந்த விழா 15 ஆண்டு - படிக விழா 20 ஆண்டு - பீங்கான் விழா 25 ஆண்டு - வெள்ளி விழா 30 ஆண்டு - முத்து விழா 40 ஆண்டு - மாணிக்க விழா 50 ஆண்டு - பொன் விழா 60 ஆண்டு - வைர விழா 75 ஆண்டு - பவள விழா 100 ஆண்டு - நூற்றாண்டு விழா.

Determination of an good egg


நோன்பு கஞ்சி செய்வது எப்படி


முஸ்லிம்களின் இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து. தேவையான பொருட்கள்: சிக்கன் (அ மட்டன் கீமா - 100 கிராம் பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் - முக்கால் டம்ளர் பச்ச பருப்பு - இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது) வெங்காயம் - ஒன்று பெரியது தக்காளி - ஒன்று தயிர் - ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி கேரட் - அரை துண்டு பச்ச மிளகாய் - ஒன்று மிள்காய் தூள் - அரை தேக்காண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு எண்ணை - ஒரு தேக்கரண்டி நெய் (அ) டால்டா - ஒரு தேக்கரண்டி தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று வெந்தயம் = கால் தேக்கரண்டி கொத்து மல்லி தழை - சிறிது புதினா - சிறிது செய்முறை * வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும். * குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும். * அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை) இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும். * தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும். தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும். நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும். குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும். ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும். சுவையான நோன்பு கஞ்சி தயார் இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன். குறிப்பு. குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம். நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி. இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செய்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் என்ன..?


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் என்ன..? ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள். இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும். இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

நட்ஸ்-அக்ரூட் பருப்புயின் மருத்துவ குணங்கள்! ! !


நட்ஸ்-அக்ரூட் பருப்புயின் மருத்துவ குணங்கள்! ! ! ! என்ன சத்து? வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் "ஈ" சத்து நிறைந்துள்ளது. மேலும், புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க், கார்போஹைட்ரேட்,உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு இதில் உள்ளது. எத்தனை சாப்பிடலாம்? தினம் இரண்டு அல்லது மூன்று. என்ன பலன்? சருமத்துக்கு நல்லது. உடலில் எடையை பாலன்ஸ் செய்யும், கொலஸ்ட்ராலை குறைக்கும். பாதாம் பருப்பு என்ன சத்து? முதுமையை தடுக்கும் வைட்டமின் "ஈ" பாதாமில் அதிக அளவில் அடங்கியுள்ளது. புரதம், கொழுப்பு,மக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் இதில் உள்ளது.இதைத் தவிர, சோடியம், வைட்டமின்கள் பி1, பி2, பி3 மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. எத்தனை சாப்பிடலாம்? சிறுவர்கள் 10 முதல் 12 பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்என்கிறார்கள் நிபுணர்கள். பெரியவர்கள் இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். நீரில் அல்லது பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம். என்ன பலன்? சருமம் பொலிவடையும். தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பிஸ்தா: என்ன சத்து? புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ், கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. எத்தனை சாப்பிடலாம்? தினமும் நான்கு அல்லது ஐந்து சாப்பிடலாம். என்ன பலன்? பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. முந்திரி பருப்பு : என்ன சத்து? செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எத்தனை சாப்பிடலாம்? நான்கு அல்லது ஐந்து சாப்பிடலாம். என்ன பலன்? உடல் உறுதியாகும். எலும்புகளுக்கு நல்லது. பற்கள் உறுதியாகும் சருமத்துக்கு நல்லது.

அழகிய ஓவியம்..!


இலவச ஆன்லைன் வேலை - காப்பி பேஸ்ட் ஜாப்

வணக்கம்,

எமது வலைத்தளத்திற்கு புதியதாக வந்திருக்கும் தங்களிடம் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா? ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான்.

அப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம்? 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.

ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.

நாங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம்... இதோ சமீபத்தில் இணைய பணிகள் வாயிலாக வாங்கிய பணத்திற்கான ஆதாரங்கள் > பார்க்க > http://www.youtube.com/watch?v=2o-7IMR3gaw

மேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

நீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


சரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி? எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா? வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா? அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.

My Referral Link : > http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4561

இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் வேலை - Google adsense

Image

Adsense Click Exchange - Join Now


இணையம் மூலம் வீட்டிலிருந்தபடியே கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், அதிகம் ஆங்கிலம் தெரியாது. ஆனால், நான் 3 மாதத்திற்கும் மேலாக கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறேன். தினம் ஒர் மணி நேரம் இண்டர்னெட் பயன்படுத்துகிறேன். ஏதேனும் எளிமையான ஆன்லைன் ஜாப் கிடைக்குமா, பார்ட் டைமாக செய்து பணம் சம்பாதிக்க எனத் தேடுபவர்களுக்கும், கல்லூரி படிப்பு படித்திருக்கிறேன்... இணையம் மூலம் வீட்டிலிருந்தே பணி செய்ய விருப்பம் எனச் சொல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் சரி, அதிக வருவாய்க்காக ஆன்லைன் ஜாப் தேடும் ஆண்களாக இருந்தாலும் சரி... எல்லோரும் எளிதாக பணம் சம்பாதிக்கக் கூடிய காப்பி பேஸ்ட் ஜாப், அட்ஸ் போஸ்டிங்க் ஜாப், போன்ற ஈசியான ஜாப்களை படுகை.காம் வழங்குவதுடன்... அதன் மூலம் அட்ஸ் கிளிக் ஜாப் வருவாய் பார்க்கவும் உதவியாக இருக்கிறது.

இதுமட்டும் அல்லாமல், இணையத்தில் வருவாய் வாய்ப்புகளை வழங்கும் பல ஆன்லைன் ஜாப் பற்றிய விவரங்களும், அதன் மூலம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்ற முழுமையாக பயிற்சியும் படுகை.காம்-இல் வழங்கப்படுகிறது. ஆகையால் மிக எளிதாக ஒரே வாரத்தில் ஆன்லைன் ஜாப் செய்யக் கற்றுக் கொள்வதுடன் 15வது நாளிலிருந்து சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிடலாம்.

உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் செய்ய விருப்பமா, வாருங்கள். இதோ கீழிருக்கும் எனது ரெபரல் லிங்கினைக் கிளிக் செய்து இன்றே இலவசமாக இணைந்து கொள்வதுடன்... உடனடியாக சம்பாதிக்கவும் ஆரம்பியுங்கள்.

My Referral Link
: http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4561

Ads CLick Job
Adsense Click Exchange என்றதும், Google Adsense CLick Exchange Team build பண்ணுகிறேன்னு நினைக்க வேண்டாம். இது அதைப்போன்ற ஒர் விளம்பரம் வழியாக ட்ராபிக் பெற்றுக் கொள்ளும் வரிவிளம்பரத்தினை கிளிக் செய்யும் பணி தான் என்றாலும், அட்சன்ஸ் போல் அல்லாது விளம்பரதாரர்களே நம்மை கிளிக் செய்து கொள்ள அனுமதிக்கும் பணி. இவ்வாறக எளிதாக 5 நிமிடம் அட்ஸ் கிளிக் செய்வதன் மூலம் தினம் $5.00 வரை சம்பாதிக்க முடியும்.

Copy Paste Job:
காப்பி பேஸ்ட் ஜாப் மிகவும் எளிதான ஒன்று. இதனைச் செய்தால் போதும், மாதம் ரூ.10,000/- மேல் சம்பாதிக்க முடியும். காப்பி பேஸ்ட் செய்வதற்கான ஆர்ட்டிகள், ரெபரல் லிங்க் விவரம் எல்லாம் நாங்கள் கொடுத்துவிடுவோம். நீங்கள் செய்வதெல்லாம்... ஜஸ்ட் ஒர் 30 நிமிடத்தில் கொடுக்கும் தளங்களில் ஒர் முறை காப்பி பேஸ்ட் செய்துவிட்டால் போதும். அவ்வளதான், விருப்பம் உள்ளவர்கள் பார்த்து சேர்ந்து கொள்வார்கள்... சேரச் சேர கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

Ads Posting Job
இதுவும் மிக எளிதான பணி. இதன் மூலமும் மாதம் ரூ.10,000/க்கும் மேல் சம்பாதிக்க முடியும். இதனையும் தினம் ஒர் மணி நேரம் செய்தால் போதும். இதற்கான விளம்பரம் மற்றும் செய்ய வேண்டிய விளம்பரத் தளங்கள் லிஸ்ட் கொடுத்துவிடுவோம். நீங்கள் அத்தளங்களில் விளம்பரங்களைச் செய்துவிட்டால் போதும்... இலவசம் தான்.

Forum/Blog Comment
இதுவும் ஒர் எளிமையான பணி. பணி விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் அதன்படி ஜஸ்ட் காப்பி பேஸ்ட் மட்டும் செய்தால் போதும்.


அனைத்து பணி விவரங்களும் சொல்லித்தரப்படும். அதன்படி நீங்கள் காப்பி பேஸ்ட் செய்தே வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம். ஆகையால், இப்பொழுது நீங்கள் இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.


My Referral Link
: http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4561

அன்புடன்
உங்கள் "சுற்றும் பூமி"

பங்குச் சந்தை பயிற்சி Share Market trading

Image

வீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

பங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள்.

ஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

படுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.

குறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.

ஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.

நீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4561

மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


அன்புடன்
உங்கள் "சுற்றும் பூமி"

இலவச ஆன்லைன் ஜாப் - Free Online Job

இணைய வேலையில் மிகவும் முக்கியமானது பதிவுகள்/ஆர்ட்டிகள். எந்தவொரு தளமும் கருத்து ஆர்ட்டிகள் இல்லாது இருக்காது. பொழுது போக்கிற்காகத் தொடங்கப்பட்ட பேஸ்புக் தளம்கூட கருத்து அரட்டையில் தான் வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால் ஒவ்வொரு வரும் தங்களது கருத்துக்களைப் பதிவாகச் செய்ய வேண்டும், பிறர் பதிவுகளில் நம்முடைய கருத்துக்களை போஸ்ட் ரிப்ளையாக செய்ய வேண்டும்.

விவாத அரட்டை என்பது தற்சமயக் கால சூழலோடும், நம்மோடு இருக்கும் நண்பர்களைப் பொறுத்து சூடு பிடிக்கும் என்றாலும், புதிய நண்பர்களை இணைக்கும் பொருட்டு நமது முதன்மையான கருத்துப் பதிவுகள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் புதியவர்கள் நம் தளத்தில் இணைவதோடு, விவாதமும் களைகட்டும். இது ஒர் பொதுச் சமாச்சாரம். பேஸ்புக்கில் நண்பர்களைச் சேர்த்துக் கொள்வது போல.

படுகை ஆன்லைன் வேலை சம்பந்தமாகவே அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அப்படியாக, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நீங்களும் கோல்டன் மெம்பராக படுகையில் இணைந்து கொண்டீர்கள். கோல்டு மெம்பராக இணைந்ததோடு நம் பணி முடிந்துவிட்டதா? அல்லது கோல்டன் மெம்பர் கட்டணத்தினைச் செலுத்துவதுதான் நம் பணியா? இல்லையே!! நாம் வருவாய் பார்க்க வேண்டும் தினம் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க வேண்டும்.

படுகையில் பணி வாய்ப்பு தளங்கள் பற்றிய நிறைய தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து பணிகளைச் செய்வதோடு இல்லாது, உடனே அதில் பெற்ற வருவாயினை ஆதாரமாக தினம் ஒர் பதிவு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாரம் ஒர்முறை வந்து கொண்டிருக்கும் சர்ச் ஜாப் செய்தால் கூட உடனே ஒர் பேஅவுட் வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டும் அல்லாமல் மாதம் ஒர்முறை எளிமையான YES/NO Dick Job-யும் வருகிறது. புதுமையான இலவச ஆஃபர்கள் தினம் தினம் வருகின்றன. இதன் மூலமும் நாம் வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.

படுகை கோல்டு மெம்பர்கள் அனைவரும் ஒர் வலைப்பூ வெப்சைட் தளம் கொண்டிருப்பீர்கள், இல்லாவிடில் கேட்டால் செய்து தரப்படும். அதில் படுகை ரெபரல் லிங்கினை விளம்பரமாக அமைத்துக் கொள்வதுடன்.. தினம் ஒர் 1 ஆர்ட்டிகள் செய்து வந்தால் விரைவில் தினம் ரூ.1000 சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம். இதற்கான ஆர்ட்டிகளும் படுகை தளத்தில் கொடுக்கப்பட்டுவிடுகிறது... நமது பணி காப்பி பேஸ்ட் செய்வது மட்டும் தான். இதற்கு ஒர் 1 நிமிடம் ஆகலாம்... அடுத்து, அதனை விளம்பரம் செய்ய ஒர் 15 நிமிடம். பின்னர் படுகையில் பிறர் பதிவுகளில் பின்னூட்டமிடுவது, நம் அரட்டையை பதிவிடுவது என ஒர் 30 நிமிடம்.... மொத்தத்தில் ஒர் மணி நேரம் பொழுது போக்கினை படுகை மூலமாகச் செய்தால் போதும் தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம்.

நீங்கள் படுகையில் இணைந்து கொள்ள இதோ எனது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4561

காப்பி பேஸ்ட் என்பது எளிதான ஆன்லைன் ஜாப் என்பதோடு, வருவாயும் மிகவும் அதிகம் கொடுக்கும் பணி. நீங்கள் என்னும் கோல்டு மெம்பர் ஆகவில்லை என்றால் இன்றே படுகையில் ஒர் கோல்டு மெம்பராகச் சேர்ந்து கொள்ளுங்கள்.

தற்பொழுது உங்களுக்கு ஒர் எளிதான ஆன்லைன் ஜாப் பற்றி மட்டும் சொல்கிறேன்... இதனைச் செய்து நீங்கள் வருவாய் பார்த்துவிட்டு, மேலும் பல ஆன்லைன் ஜாப் தகவலுக்கு படுகையில் சேர்ந்து கொள்ளுங்கள்.

இலவச ஆன்லைன் ஜாப் தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html



சமீபத்தில் இத்தளம் புதிய வடிவத்தினைப் பெற்றிருந்தாலும், அதில் TASK என்றப் பகுதியில் வாரம் ஒர்முறை வரும் சர்ச் ஜாப் பற்றிய தகவல் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஜாப் எப்பொழுது கொடுக்கப்படுகிறது என்றத் தகவல், படுகையில் கிடைக்கும்.



இத்தளத்தின் மூலம் பெற்ற வருவாய் ஆதாரம்:



மேலும் பல ஆன்லைன் ஜாப் பண வருவாய் ஆதாரங்களை படுகையில் பார்க்கலாம்.

நீங்கள் படுகையில் இணைந்து கொள்ள இதோ எனது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4561




நன்றி