சோளம் ஒரு புல்வகை. வெண்சோளம், சிவப்பு சோளம், என்று இரண்டுவகையிருக்கின்றன. சோளம் முற்றாத போது பால் கொண்ட தானியமாக இருக்கும்.
சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி என்று சோளம் தான் கிராம மக்களின் எளிமையான உணவு. சோளத்தோசையின் மிகவும் ருசியாக இருக்கும்.
...
ஒரு எளிமையான ரெசிபி - சோளக் கஞ்சி
தேவையானவை
சோளம் - 1 கப்
கேரட் & பீன்ஸ் - 200 கிராம்
பட்டாணி - 50 கிராம்
எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்கறிகளை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
சோளத்தை வறுத்து ஆற வைத்து மிக்சியில் ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்
அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை போட்டு 5 நிமிடம் வதக்கவும்
மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கொதி வந்ததும் பொடித்த சோளத்தை போட்டு கைவிடாமல் கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோளம் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
இந்தக் கஞ்சி மிகவும் சத்தானது.
0 comments:
Post a Comment