Tuesday, July 16, 2013

கீரைகளும் மருத்துவப் பயன்களும்! ! ! !


கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை: இருமல் குணமாகும் புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும். அறுகீரை: சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்.

0 comments:

Post a Comment