
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் (16.07.2013) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு எங்கள் கண்ணீர்க் அஞ்சலி!!
கல்வியை கடைச்சரக்காக மாற்றி நீங்கள் வைத்த தீ தாண்டா எம்முடைய 94 குழந்தைகளை கருக்கியது. இன்னும் ஒருவருக்கு கூட தண்டனை தரப்படவில்லை என்பதே நீதியின் கொடுமை!!!
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பள்ளி குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயத்துடன் உயிர்தப்பினர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி உலகையே உலுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ந் தேதி அன்று தீவிபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு குழந்தைகளின் படங்கள் பேனர்களை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
0 comments:
Post a Comment