நீதியரசர் ப. சதாசிவம், இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் இருந்து இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழர்,
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த காடப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்,
விவசாயத்தின் மேல் எல்லையற்ற மரியாதை கொண்டவர், அதன் சான்றாக இவரது இளைய மகன் அவரது சொந்த கிராமத்திலேயே விவசாயம் பார்த்து வருகிறார்,
இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும் முன்வைக்காத இட ஒதுக்கீட்டு முறையை நீதிபதி நியமனத்தில் கொண்டு வர வேண்டுமென்று வெளிப்படையாக சொல்லி பெரியார் மண்ணின் பெருமையை நிலை நாட்டியவர்,
ரிலையன்ஸ் எரிவாயு எடுக்கும் முயற்சியில் இறங்கிய பொழுது, அதனை எதிர்த்து தீர்ப்பு வழங்கி, மக்கள் சொத்து மக்களுக்கே என்று உறுதியாக கூறியவர்,
பெரியார் மண்ணில் பிறந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கும் நீதியரசர் சதாசிவம் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் !
0 comments:
Post a Comment