ஆன்லைன் வேலை வேண்டுமா?

நீங்களும் படுகை வாருங்கள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்யலாம்.

பெண்களுக்கு உகந்தது ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தே வேலை செய்வதால் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்ள முடிகிறது.

ஆன்லைன் ஜாப் பயிற்சிகள்

ஆன்லைன் வேலை என்றால் என்னவென்றே தெரியாத நான், எளிதாக வீட்டிலிர்ந்தே கற்றுக் கொண்டு வேலை செய்கிறேன்.. நிறைய சம்பாதிக்கிறேன்.

விரும்பும் நேரத்தில் பணி

ஆன்லைன் என்பதால் எப்பொழுது நமக்கு நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது கம்ப்யூட்டரை ஆன் செய்து வேலை செய்யலாம்.

மாதம் ரூ.35,000/- சம்பாதிக்கலாம்

வேலைகள் எல்லாமே மிகவும் எளிமையானது மட்டும் அல்லாமல், விரும்பிச் செய்தால் தினம் தினம் ரூ.1000 சம்பாதித்துக் கொள்ளலாம். அதுவும், காப்பி பேஸ்ட் வொர்க்கில் கூட அவ்ளவு சம்பாதிக்கலாம்னா பார்த்துக்கோங்க.

Thursday, August 22, 2013

சென்னை தினம் !


தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஐ நினைவூட்டும் நாள். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் நாயக்கர்களிடம் இருந்து சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாள். 19 ஆம் நூற்றாண்டிள் செயற்கை துறைமுகம் கட்டப்பட முதல் பயணிகளும் ,பொருட்களும் நேரடியாக தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது .

கழுத்து வலியும் டிஸ்க் விலகலும் பற்றிய தகவல்கள்:-


கழுத்து வலி : கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது. டிஸ்க் விலகல் :டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும். ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் : இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. ரத்தத்தில் Ra Factor,Uric Acid, Asotire, ESR, Creactine Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள்.

பழந்தமிழரின் அளவை முறைகள்...!


முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்று தூணி = ஒரு கலம். நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை. முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை. பத்து விராகன் எடை = ஒரு பலம். இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை. ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா. மூன்று தோலா = ஒரு பலம். எட்டு பலம் = ஒரு சேர். நாற்பது பலம் = ஒரு வீசை. ஐம்பது பலம் = ஒரு தூக்கு. இரண்டு தூக்கு = ஒரு துலாம். ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம். ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம். ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்) ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம். ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். ஒரு விராகன் = நான்கு கிராம். கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி. மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம். அறுபது நாழிகை = ஒரு நாள். ஏழரை நாழிகை = ஒரு சாமம். ஒரு சாமம் = மூன்று மணி. எட்டு சாமம் = ஒரு நாள். நான்கு சாமம் = ஒரு பொழுது. ரெண்டு பொழுது = ஒரு நாள். பதினைந்து நாள் = ஒரு பக்கம். ரெண்டு பக்கம் = ஒரு மாதம். ஆறு மாதம் = ஒரு அயனம். ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு. அறுபது ஆண்டு = ஒரு வட்டம். தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சித்த மருத்துவ குறிப்புகள்:-


தேமல்: வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும். மூலம்: கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும். பப்பாளிக்காய்:- விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம். மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். இரு நல்லது கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும். பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும். சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். தீப்புண்: வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

ஆயுர்வேத அழகு குறிப்புகள்


* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். • நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். • கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும். • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். • இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

Friday, August 16, 2013

கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி மரணம்!


பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15–ந்தேதி மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி செங்கமலம் (வயது 55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின்னர் அவர் சோகமாக இருந்தார்.

ஊசிப்பாலை இலையின் மருத்துவ குணங்கள்:-


கோடையின் தணலை தணிக்க உட்கொள்ளும் பானங்களால் தற்காலிமாக நாக்கிற்கும், தொண்டைக்கும் குளுமை உண்டாகுமே தவிர, உடலின் உஷ்ணம் முழுவதுமாக குறைவதில்லை. அதுமட்டுமின்றி உடலில் தோன்றும் அதிக வியர்வையால் ஏற்பட்ட நீரிழப்பு, வைட்டமின் குறைபாடு போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த, ஊட்டச்சத்து மிகுந்த கீரைகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். உடலில் இழந்த சக்தியை ஈடு செய்து போதுமான ஊட்டச்சத்தை நரம்பு திசுக்களுக்கு தந்து, உடல் உஷ்ணத்தை தணித்து மருந்தாக மட்டுமின்றி, உணவாகவும் பயன்படும் அற்புத கீரை வகையைச் சார்ந்த மூலிகைதான் ஊசிப்பாலை. ஆக்சிஸ்டெல்மா செக்காமோன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபிடேசியே குடும்பத்தைச் சார்ந்த ஊசிப்பாலை கொடிகள் நெற்பயிர்களின் ஊடே களைச் செடிகளாக வளர்ந்து காணப்படுகின்றன. இந்த கொடியில் பால்சத்து உள்ளதால் பாலை வர்க்கத்தைச் சார்ந்தவையாக கருதப்படுகின்றன. ஊசிப்பாலை கொடியில் ஆக்ஸிசின், எஸ்குலன்டின், கார்டினோலைட், ஆக்ஸிடெல்மோசைடு, ஆக்ஸிஸ்டெல்பின் போன்ற சத்துக்கள் செல்களில் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உடல் உஷ்ணத்தால் தோன்றும் வாய்ப்புண்கள் நீங்க ஊசிப்பாலை இலைகளை வாயிலிட்டு மென்று வரவேண்டும். அதே போல் ஊசிப்பாலை இலைகளை கசாயம் செய்து குடித்து வர வாய்ப்புண், உதடு வெடிப்பு, நாசித் துவாரங்களில் ஏற்படும் வறட்சி நீங்கும். சாதாரண கீரையை சமைத்து சாப்பிடுவது போல் ஊசிப்பாலை இலைகளை நன்கு கழுவி, ஆய்ந்து, வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து, அத்துடன் வதக்கிய ஊசிப்பாலை இலைகள், சீரகம், மஞ்சள்தூள், மிளகாய், உப்பு சேர்த்து கூட்டுபோல் செய்து வாரம் ஒருநாள் சமைத்து சாப்பிட கண் குளிர்ச்சியடைந்து தேகம் பூரிக்கும்.

நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்


1. உங்கள் சிகிச்சை முறையில் உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும். உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் உணவைப் போலவே உங்கள் உணவும் அமைந்து இருக்கலாம். 2. தினமும் சரியான நேரத்தில் உணவுகளை அளவுடன் உண்ண வேண்டும். ஒருபோதும் உணவைத் தவிர்த்தல் கூடாது. 3. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமை, கேழ்விரகு போன்ற உணவு வகைகளையே உண்ண வேண்டும். என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி, கோதுமை, பார்லி, போன்ற எல்லா வகையான தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதைவிட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதை முக்கியமானதாகும். 4. புரதசத்து அடங்கியுள்ள முளைவிட்ட கடலை, பச்சை பயிறு, முழுக்கடலை, காராமணி, மொச்சை, பட்டாணி, போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ந்துக் கொள்ள வேண்டும். 5. உணவு தாளிக்கும் போதும், பொறிக்கும் போதும் அனுமதிக்கப்பட்ட எண்ணெய் அளவையே உபயோகிக்க வேண்டும். நல்லெண்ணேய், சபோலா, சன்பிளவர். ரீபைண்ட் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய் வகைகளை உபயோகிக்கலாம். 6. சமைக்கும் போது, குறைந்த அளவு உப்பையே உபயோகிக்க வேண்டும் சாப்பிடும்போது மீண்டும் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். (இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர் கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பு சேர்த்துக் கொள்ளவும்). 7. ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் வரை நீரை கண்டிப்பாக அருந்த வேண்டும். சாப்பிடும் போது நீர் பருகுவதை தவிர்த்தல் நலம். (சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு நீரின் அளவு - மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்) 8. நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களையும், கீரை, காய்கறி வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். 9. இடைப்பட்ட நேரத்தில் உண்ணக்கூடிய உணவு வகைகள் மோர், தக்காளிச்சாறு, சூப், முட்டைக்கோஸ், முள்ளங்கி, சாலட், போன்றவைகளை கூடுமான வரையில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். 10. சிறந்த உணவுக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றினால் அ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கலாம். ஆ. இந்நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும். (விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல சிறுநீரக மற்றும் இருதய பாதிப்பு) இ. உட்கொள்ளும் மருந்தின் அளவைக் குறைக்கலாம். ஈ. உடல் எடையை சீரான முறையில் வைத்துக் கொள்ளலாம். உ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது ஏற்படும் அறிகுறிகள் அதிக பசி வியர்வை பெருகுவது உடல் நடுக்கம் படபடப்பு பலவீனம் தளர்ச்சி மயக்கம் பார்வை மங்குதல் மனநிலை மாற்றம் இந்த நிலைக்கான அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தாலும், இதனைத் தொடர்ந்து மயக்கம்மும், சுயநினைவற்ற நிலைமையும் தோன்றும். இன்சுலின் சார்ந்த இளம் வயதினர்களுக்கு இழுப்பு வருவது அறிகுறிகளில் ஒன்றாகும். மேற்கண்ட அறிகுறிகள் தோன்றும் பொழுது நீரழிவு நோயாளிகள் சர்க்கரையோ அல்லது குளுக்கோஸோ எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகமாகி சுயநினைவு இன்றி இருப்பின் டாக்டரிடம் காண்பித்து உடல் வழி செலுத்தும் குளுக்கோஸ் தரப்படுவதால் சில நிமிடங்களில் சயநினைவு வர வழிவகுக்கும். 11. தினமும் மருத்துவர் கூறும் வகையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது நடத்தல் அவசியம்.

கோவையில் காவல்துறை வாகனம் மோதி 16 மாத முஸ்லிம் குழந்தை பலி......!!


கோவையில் காவல்துறை வாகனம் மோதி 16 மாத முஸ்லிம் குழந்தை பலியாகியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது... வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலானாய்வு குழு காவல்துறையினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை தெற்கு உக்கடத்துக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக, காவல்துறை உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் அண்ணா நகர் பகுதியில் சோதனையிட்டனர். அப்போது காவல்துறை சென்ற ஜீப் ஒன்று அப்பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் 16 மாத குழந்தை ஆஷிப் ரகுமான் மீது மோதியது. பலத்த காயமடைந்த குழந்தையை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. (இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...) இச்சம்பவத்த்தினால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து உக்கடம் “பைபாஸ்” ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பிரவேஸ்குமார் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினார். விபத்து ஏற்படுத்திய போலீஸ் ஜீப் டிரைவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அகத்திக்கீரை பலன்.


அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

The Bombardier beetle shoots boiling liquid as a defense mechanism


The incredibly complex bombardier beetle has an amazing and unique ability: when threatened it shoots boiling hot chemicals from its abdomen up to 70 times rapidly. The liquid is a combination of hydrogen peroxide and hydroquinones which join together inside the beetle causing a chemical reaction. The liquid is fatal to small insects and creatures and can be very painful to humans...

' அரிக்கமேடு '


பெயரைப் படித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும் . ஆனால் ,எத்தனை தேசம் போனாலும் கிடைக்காத பெருமை , பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று பொக்கிஷம் . தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டனம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது. ( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது . புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது. 1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லுரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர். அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வாளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES)சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது. ரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

விஷ்ணுக் காந்தி செடியின் மருத்துவ குணங்கள்;-


இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி, வட்டமான சில மலர்களை உடையது. பொதுவாக நீலநிறமாகவும், அரிதாக வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படும். விஷ்ணுக் கிரந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது. செடிகள் முழுவதும் மருத்துவக் குணமுடையது. மருத்துவக் குணங்கள்: விஷ்ணுக் காந்தி நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், கோழையகற்றியாகவும், வியர்வை பெருக்கியாகவும், தாது பலமூட்டியாகவும் செயல்படுகிறது. விஷ்ணுக் காந்தி சமூலம் 5 கிராம் எடுத்து பால்விட்டு நெகிழ அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி மூன்று வேளையும் கொடுத்து வந்தால் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாதம், பித்தம் தொடர்பான நோய்கள் அனைத்தும் குறையும். விஷ்ணுக் காந்தி சமூலத்தை விழுதாக அரைத்து நெல்லிக்காயளவு ஓரிரு மண்டலம் உட்கொண்டு வந்தால் கண்டமாலை நோய் குறையும். விஷ்ணுக் காந்தியை கொட்டைப் பாக்களவு அரைத்து எடுத்து தயிரில் கலந்து கொடுத்து வந்தால் இரத்தபேதி, சீதபேதி குறையும். காரம், புளி நீக்க வேண்டும். விஷ்ணுக்காந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி சமன் அரைத்துப் பாக்கு அளவு காலை, மதியம், இரவு உணவுக்கு முன் உண்டு பால் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி, இந்திரிய ஒழுக்கு, மறதி, வெட்டைச்சூடு தணிந்து உடல்பலம் உண்டாகும். விஷ்ணுக்காந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரைத்தேக்கரண்டி சீரகமும் சேர்த்து நெகிழ அரைத்து கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்

விவாதத்திற்கு தயாரா ?


இந்திய தேசத்தின் சுதந்திர தினமான நேற்றைய தினம் இந்திய விடுதலையில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன ? இஸ்லாமிய பெண்களின் பங்கு என்ன ? என்பதையெல்லாம் விவரிக்கும் முகமாக இரண்டு மூன்று பதிவுகளை நாம் வெளியிட்டிருந்தோம். அந்த பதிவுகளில் நாம் பில்டப் செய்து பொய் செய்தி வெளியிட்டதாக காவிகள் விஷம பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வரலாறுகளை பற்றி கருத்து கூற விரும்புபவர்கள் வரலாற்றின் பக்கங்களை புரட்டிவிட்டு கருத்து கூறினால் நன்றாக இருக்கும். வரலாறு என்றால் என்னவென்றே தெரியாமல்... ஏதோ எழுதுவதற்கு இடம் கிடைத்து விட்டது என்பதற்காக மனம் போன போக்கிலே எழுதுவது முட்டாள் தனமானதாகும். நாம் வெளியிட்ட பதிவில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன, முஸ்லிம் பெண்களின் பங்கு என்ன என்பதையெல்லாம் ஆதாரத்தோடு நிரூபிக்க நான் தயார். நான் சொன்னது பொய் என்று நிரூபிக்க அவர்கள் தயாரா ? இன்னும் சொல்ல போனால்... 1) இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவின் மக்கள் தொகையில் இஸ்லாமிய மக்களின் சதவீதம் எவ்வளவு... தம்முடைய சதவீதத்தை தாண்டி இந்தியாவில் முஸ்லிம்கள் தேசத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள், இரத்தம் சிந்தினார்கள், சிறை சென்றார்கள், தம்முடைய சொத்து சுகங்களை எல்லாம் நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக அற்பணித்தார்கள். 2) வெள்ளிகிழமையிலே முஸ்லிம்களின் சிறப்பு தொழுகையின் போது நிகழ்த்தப்படும் உரையில் கூட நாட்டின் விடுதலை பற்றி தான் உரை நிகழ்த்தி அனைத்து முஸ்லிம்களின் இரத்த நானங்களிலும் விடுதலை உணர்வை ஊக்குவித்தார்கள். பள்ளிவாசலில் செய்த அளவிற்கு மற்ற மத ஆலையங்களில் செய்திருப்பார்களா ? 3) ஆங்கிலத்தின் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கற்ப்பது இஸ்லாத்தில் ஹராம் (மதத்தில் தடுக்கப்பட்டது) என்று முஸ்லிம் தலைவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். 4) வ.ஊ.சி கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்கி கொடுத்து அந்த கப்பலை ஓட்ட கற்றுகொடுத்தவர் வள்ளல் பக்கீர் முஹம்மது. அந்த காலத்தில் 60 ஆண்டுகளுக்கு அந்த கப்பலின் விலை பல லட்சம் என்றால் இந்த காலத்தில் அதன் மதிப்பு பல கோடியாகும் 5) நேதாஜி அமைத்த படைகளுக்கு இந்தியா முழுவதும் வசூல் செய்து 25 ஆயிரம் கூட வசூல் ஆகாத நிலையில் வள்ளல் ஹபீப் முஹம்மது மட்டும் 1 கோடி ருபாய் கொடுத்தாரே... இன்றைய தினத்தில் அதன் மதிப்பு பல கோடியாகும். 6) சுதந்திர போராட்டத்தின் போது பீரங்கியை அறிமுகம் செய்தாரே திப்பு சுல்தான் அது உண்மை இல்லையா ? 7) தனது இரண்டு மகன்களின் தலையை நாட்டிற்காக அர்ப்பணித்தாரே பகதூர் ஷா அது உண்மை இல்லையா ? 08) அரசியாக வாழ்ந்த ஹஜ்ரத் பேகம் அறவழியில் போராடி காட்டில் மரணித்தாரே அது உண்மை இல்லையா ? 9) தம்முடைய தேசத்தை வளமாக்க தம்முடைய உடலை உரமாக்கினாரே மருதநாயகம் அது உண்மை இல்லையா ? 10) காயிதே மில்லத் அவர்கள் தம்முடைய பட்டங்களை எல்லாம் தூக்கி வீசினார்களே அது உண்மை இல்லையா ? இப்படி இந்நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் தம்முடைய சதவீதத்தை விட அதிகமாக அர்ப்பணித்துள்ளார்கள். நான் சொன்ன செய்திகள் அனைத்தும் பொய் என்று விஷம பிரச்சாரம் செய்தீர்களே... நான் சொன்னவைகள் உண்மை இல்லை பொய் என்று ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா ? விவாதத்திற்கு வருகிறீர்களா ? லட்சகணக்கான பாமர மக்கள் பங்கு கொண்டிருக்கும் இதே முகநூலில் விவாதம் மேற்கொள்வோமா ? அப்பாவி பொதுமக்கள் மத்தியில் நஞ்சை விதைக்க முயற்சிக்கிறீர்களே... விவாதத்திற்கு வாருங்கள்.. வரிக்கு வரி பதில் கொடுத்து உண்மைகளை உலகுக்கு கொண்டு செல்கிறேன். விவாதத்தின் போது இதை விட நூற்றுகணக்கான செய்திகளை நாட்டு மக்களுக்கு பறைசாற்றுகிறேன். அதுவே நான் சொன்னவைகள் பொய் என்று நிரூபித்து விட்டால் எந்த தேதியில் நீங்கள் நிரூபிக்கிறீர்களோ அதே தேதியில் நான் முகநூலை விட்டே வெளியேறுகிறேன். விவாதத்திற்கு தயாரா ? சவாலுக்கு நான் தயார்... நீங்கள் தயாரா ?

விழித்துக்கொள்...


அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.. ஆனால் நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் பெற்றுள்ளோம், அரசியல் வாதிகள் இடமிருந்து இல்லை.. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு முறையில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் நடித்த ஒரு தமிழ் படம், தமிழகத்தை தவிர அணைத்து மண்ணிலும் வெளியிடப்பட்டது. முகநூலில் அதை பற்றி நிறைய பதிவுகள் பார்த்திருந்தேன், ஆனால் மனதில் ஒன்றும் தோன்றவில்லை, ஆனால் தற்செயலாக நேற்று ஒரு காணொளி காண நேர்ந்தது, பொதுவாக அவரிடம் பணியாற்றும் அனைவரும் சொல்வது மிகவும் கலகலப்பான நடிகர் என்று தான், ஆனால் அந்த கானொளியில் அவர் எவ்வளவு வருத்ததுடன் பேசிருப்பர், வேறு ஒரு ரசிகனாய் இருந்தாலும் அதை கண்டு கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பான். படம் வெளிவராமல் இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது யாவரும் அறிந்ததே, உங்கள் தனிப்பட்ட கோபத்தை அரசியலுக்கு வெளியே காட்டலாமே, நீங்கள் பத்தி ஏற்கும் பொழுது கீதையின் மீதும், இந்திய சட்டப் புத்தகத்தின் மேல் சத்தியம் செய்த படி கூறிய "என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என் பதவியின் பலம் வைத்து தீர்க்கமட்டேன்", என்று சொன்னது எங்கே போனது.. அப்படி என்றால் கீதையின் மேலும், சட்டப் புத்தகத்தின் மேலும் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு இதுதானா... வேறு ஒரு சிலர் இதை கிண்டலடிப்பதை தான் கடந்த ஒரு வாரமாக தங்கள் வேலையாய் கொண்டுள்ளனர், ஒருவரின் வருத்தத்தை எப்படி தான் உங்களால் சந்தோசமாக மாற்ற முடிகிறதோ..அதே போன்று ஒரு தனி மனிதனுக்காக உயிர் விடுவதும் அற்பமான விஷயம், அவன் சற்று தான் குடும்பத்தையும் நினைத்து பார்த்திருக்க வேண்டும்.. சற்று நினைத்து பாருங்கள், ஒரு படம் வெளிவர, ஒரு தனிமனிதனாய் எவ்வளவு போராடுகிறார், உங்களை நான் துணை நிற்க சொல்லவில்லை, தடையை நிற்க்கதீர்கள் என்றே சொல்லுகிறேன். அவரின் வேலை ஒரு பொழுபோக்கு படத்திற்கு நடிப்பது மட்டுமே, அதற்க்கு அவர் சம்பளம் வாங்கி விட்டார், இப்படம் வெளிவந்தாலும் வெளிவராவிட்டாலும் அவருக்கு அதே சம்பளம் தான். அவர் நோக்கம் தன் நடிப்பு வீணாகிவிடக்கூடாதே என்பது மட்டும் தான்.. நேற்று கமல், இன்று விஜய்... இது கலைத்துறைக்கு மட்டுமல்ல.. வேறு துறைகளிலும் நடை பெறுகிறது, வெளியே தெரிவதில்லை, தனிப்பட்ட பிரச்சனைக்காக பிறரை அரசியலாக்கி பழிவாங்குவது பலரின் வேலை ஆகிவிட்டது, நம்மை அடிமையாய் ஆள நினைக்கும் அவர்கள் நமக்கே சொல்வது இந்த "சுதந்திர தின வாழ்த்து".

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்:


''ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை இவற்றை ஒரே அளவில் சேர்த்து அத்துடன் எட்டுப் பங்கு நீரையும் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு ஆகும்படி காய்ச்சி அருந்த சர்க்கரை நோய் நீங்கும்; ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் முதலியவற்றில் ஆன்தோசயனின், டானின், ஃபீனால்கள் உள்ளதால் இவை சர்க்கரை நோயைப் போக்குவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய்கள், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நாவல் கொட்டைப் பொடியை 200 மி.கி. அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு தாவர இன்சுலினாகச் செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள சாரன்டின், குளுகோஸை செல்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது. வெந்தயம் ஒரு டீஸ்பூன் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். இதில் உள்ள ஹைட்ராக்ஸிலூஸின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. ஆலமரத்தின் அனைத்துப் பாகங்களும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீரில் ஊறவைத்து, வடித்து, அருந்த சர்க்கரைநோய் கட்டுப்படும். கருங்காலி மரப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக ஆகும் வரை காய்ச்சி அருந்தலாம். சிறுகுறிஞ்சான் இலைப் பொடியை 500 மி.கி. இரு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் சிறுகுடலில் உறிஞ்சப்படும் குளுகோஸின் அளவைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும். என்ன சாப்பிடலாம்? இஞ்சி, வெங்காயம், பூண்டு, அவரைப் பிஞ்சு, பீன்ஸ், சோயாபீன்ஸ், சிவப்பு பீன்ஸ், வாழைத் தண்டு, வாழைப் பிஞ்சு, முழுத் தானியங்கள், ஓட்ஸ், சிகப்பரிசி, பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆரஞ்சு, கொய்யா, பசலைக் கீரை, பாதாம், பூசணி விதை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். என்ன தவிர்க்கலாம்? வெள்ளை அரிசி, ரொட்டி, கிழங்கு வகைகள், வாழைப் பழம், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். சிகரெட் மற்றும் மதுவை அறவே விட்டொழிக்க வேண்டும்!

முளைக்கீரையின் மருத்துவ குணங்கள்:-


*நாம் உண்ணும் உணவில் கீரை சேர்த்து கொண்டு சாப்பிடடால் நோயின்றி வாழமுடியும். தண்டுகீரையின் இளஞ்செடியே முளைக்கீரை ஆகும் *இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.கால்சியம் சத்துகள் நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன. வலுவடையும் எலும்புகள் *முளைகீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம்.இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.வளரும் குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது முதியோர்களுக்கு இதை கண்டிபாக தரவேண்டும்.நரம்புகளுக்கும்எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும் பறந்தோடும் மாலைகண் நோய் *முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 / மிஹி ( அகில உலக அலகு ) வைட்டமின் உள்ளது. இது மாலைக்கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும். *முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும். *இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும்.

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!


நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்... இட்லி: ***** பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க! சோறு: ****** தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது! புரோட்டா: ********* பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா! சால்னா : ******* சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி! ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... **************************** தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான். எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க. சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....


நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம். அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

உளவியல் சொல்லும் உண்மைகள்


1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

Mother of Most Surviving Children From a Single Birth (8 babies):


Nadya Denise Doud-Suleman Gutierrez gets international attention when giving birth to 8 babies in one single time in January 2009. All babies were conceived via In-Vitro fertilization. The unemployed single mother already has six young children at home also by In-Vitro fertilization (Now, a total of 14 babies). Nadya Denise Doud-Suleman Gutierrez is known as the "Octomom".

முகத்திரை அணிந்த முஸ்லிம் பெண் மீது தாக்குதல்......!!


பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகத்திரை அணிந்து சென்ற முஸ்லிம் பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாரிஸில் 16 வயது முஸ்லிம் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவர் அணிந்திருந்த முகத்திரையை கிழித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகம் மற்றும் தொண்டை பகுதிகளில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் ஐரோப்பிய முக சாயலில் இருந்ததாக தாக்குதலுக்கு உள்ளான பெண் கூறியுள்ளார். இதில் ஒருவரின் அடையாளம் தெரிந்துள்ளது. பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த் அதிகரித்து வருகின்றன. இதேபோல் கடந்த வாரமும் முஸ்லிம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாவல் பழம்:


நாம் அன்றாடம் வாழ்வில் விதவிதமான பழங்களை உட்கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் பழத்தின் சிறப்பு என்னவென்று தெறிந்து கொள்வதும் அவசியமல்லவா.... அந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே... நாவல் பழத்தில் அதித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் உடலில் ஏற்படும் நோயின் தாக்கதை குறைக்கும் குணம் கொண்டது. இது சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். நாவல்பழம் ரத்தக் கொதிப்பு, நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். உடல் சூடு, கண் எரிச்சல், சீதபேதி தீர இப்பழத்தை உட்கொள்ளலாம். நாவல் பழத்தின் பருப்பைக் காய வைத்து, பொடி செய்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் தயிருடன் கலந்து பருகினால் குணம் பெறும். நாவல் பருப்பின் பொடிக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் சக்தி உண்டு. நாவல் பழம் தேகத்திற்கு குளிர்ச்சி தரும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். இப்பழத்தை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

COLD WATER AND WARM WATER


COLD WATER - Body has to expend energy to warm up water in order to use it. Helps to cool down the body after workout/exercise. Constricts blood vessels, this reduces hydration and absorption ability. Solidify fats from food, causing body to work harder to digest. WARM WATER - Soothes blood vessels, allows better hydration. Helps move the fats along, reducing risks of clogged arteries, and allows better digestion. Helps to flush the kidneys and improve bowel movements. When having fever, warm water reduces the body’s effort to fight the virus...

இந்தியர்களின் முழக்கம்......!!


இங்கே ஆயிரம் குறைகளிருந்தாலும், எங்கும் வறுமை நிறைந்திருந்தாலும், எங்கள் நாடு எங்களுக்கு எல்லா நாட்டினும் உயர்ந்ததே. இங்கே ஊழல்கள் மலிந்திருந்தாலும், மக்களைச் சுரண்டுவோர் அதிகரித்தாலும், பொய்கள் பேசி வஞ்சித்தாலும், தீமைகளுக்கு எதிராய்ப் போராடுவோம்; தேசத்தின் புகழைப் பாடுவோம். தீய சக்திகளை வேரறுப்போம்; மக்கள் சக்தியை ஒருங்கிணைப்போம். இதன் விரோதிகள் எங்கள் விரோதிகள்; இதன் நண்பர்கள் எங்கள் நண்பர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர்; தாய்த்திரு நாட்டுக்கு துரோகம் செய்வோர்; இவர்கள் களைகள்; இவர்களைக் களைவோம். எங்கள் உழைப்பு நாட்டை உயர்த்தும்; எங்கள் சிந்தனை நாட்டைத் திருத்தும்; எங்கள் எழுத்துக்கள் வழிகாட்டும்; எங்கள் எழுச்சி நாட்டைக் காக்கும். நாங்கள் சோர்வடைவதில்லை; பொய்மைக்கும் வஞ்சகத்திற்கும் பணிந்து போவதில்லை; அடக்குமுறைகளுக்கும் அராஜகங்களுக்கும் அஞ்சி நடுங்குவதில்லை. போராடுவோம்; போரும் தொடுப்போம். இது இந்தியர்களின் முழக்கம்; இது என்றும் ஓயாது முழங்கும்.

தன் உயிர் கொடுத்து 40 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர். !!!


ஊட்டியில் இருந்து ஈரோடு வரும் பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தமது பயணத்தை தொடங்கியது. பரளியாறு பகுதியில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு தீடிரென்று மாரடைப்பு ஏற்பட்டது. வலப்புறம் திரும்பினால் 1000 அடி பள்ளம். அந்த உயிர் போகும் நிலையில் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடப்பக்கமாக திருப்பி நாற்பது பயணிகளின் உயிரை காப்பாற்றினார். பேருந்தை இடப்புறம் திருப்பும் போது பேருந்து நிலைகுழைந்து பக்கவாட்டில் சாய்ந்தது, இதில் ஓட்டுனர் தலை பேருந்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஒருவேளை பேருந்து பக்கவாட்டில் சாயாமல் இருந்திருந்தால் தேவையான முதலுதவி சிகிச்சைகள் செய்து ஓட்டனரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம், ஆனாலும் அந்த சூழலில் ஓட்டுனர் பேருந்தை இடப்புறம் திருப்ப வேண்டியது கட்டாயமும் கூட, உள்ளிருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றவே ஓட்டுனர் பேருந்தை இடப்பக்கம் திருப்பினார். பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் பத்து பேருக்கு மட்டும் சிறுகாயங்கள் ஏற்பட்டது, பின்பு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சி அப்பேருந்தில் பயணம் செய்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாதது என்றும், தங்கள் உயிரை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த ஓட்டுனரை எங்கள் வாழ்வாளில் உயிருள்ளவரை மறக்க மாட்டோம் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

சுதந்திர தின உரையில் மோடியை கண்டித்த அத்வானி......!!


சுதந்திர தின உரையில் தனிப்பட்ட நபரை பற்றி விமர்சனம் செய்வது சரியல்ல என்று மோடியை அத்வானி சாடி பேசியுள்ளார். குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் ‌மோடி, கலந்து கொண்டு மத்திய அரசினையும், பிரதமரையும் தாக்கி பேசினார். இந்த நிலையில் இன்று புதுடெல்லியில் தனது இல்லத்தில் சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய அத்வானி... சுதந்திர தினத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி தான் மக்களிடம் பேச வேண்டும். அதை விடுத்து தனிப்பட்ட ஒருவரை விமர்சித்து இந்த சுதந்திர நாளில் பேசுவது சரியல்ல என மோடியின் பேச்சிற்கு அத்வானி தனது கண்டிப்பை வெளியி்ட்டார்.

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும்.


ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும். குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

Thursday, August 15, 2013

பூண்டு


பூண்டு இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

போகர்.!


சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான். அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும். உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

தென்னை மரம் (cocosnucifera)


மேம மகக் கொதிப்பு வீறு மிரத்தபித்தம் வேக வசிர்க்கர நோய் வீழ்பிரம் - தேகத்தில் வின்னம்பா லிக்கும் விசதாகம் போவென்றாற் றென்னம்பா ளைப்பூவைத தின். - தேரையர். தென்னம் பூவின் மேலுள்ள பாளையை நீக்கி உள்ளிருக்கும் பூவைப் பூண் இல்லாத உலக்கையால் நன்றாய் இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றை அருந்தப் பெரும்பாடு, வெள்ளை போகும். இதன் சாற்றுடன் இதரக் கடைச் சரக்குகளைச் சேர்த்து லேகியமாக அருந்தப் பெரும்பாடு, வெள்ளை, வெட்டையை போக்கும் மருந்தாகிறது. இளநீர் கோடையில் சிறந்த பானமாகவும், இதில் செவ்விளநீர் தைல பாகத்தில் பயனாகிறது. தேங்காய்ச் சிரட்டையிலிருந்து இறக்கிய குழித் தைலம் படர்தாமரை, அரக்கடுவன், தேமல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதைக் கருஞ்சீரகத்தைச் சேர்த்துத் தலை முழுகி வரச் சரும நோய்கள் போம். இளங்குருத்து இரத்த மூலத்தை நிறுத்தும்.

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்


சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது. வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர். வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும். ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும். உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும். மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை, தொகை சரக்கு முறை (திரிகடுகு, திரிபலா, திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.

ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது?


இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? குழந்தைகளுக்கு அணிவிக்கலாமா? யார் யார் அணியலாம் என்கிற கேள்வி பலருக்கு எழுகிறது. ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம். முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம். ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை. ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

Tamilnadu


28 மாநிலங்கள் 1618 மொழிகள் 6400 சாதிகள் 6 மதங்கள் 6 இனங்கள் 29 பெரிய பண்டிகைகள் ஒரு நாடு! அது தான் நம் இந்தியா அனைவருக்கும் இந்திய விடுதலை திருநாள் வாழ்த்துகள் !!!

சுதந்திர தின உரையில் பிரதமர் பெருமிதம்


நாட்டின் 67 வது சுதந்திர விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை வழங்கினார். இன்று காலை ராஜ்காட்டிற்கு சென்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், 07.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

கற்றாழை (Aloe vera)


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும். தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும். கூந்தல் வளர சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும். கண்களில் அடிபட்டால் கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். குளிர்ச்சி தரும் குளியலுக்கு மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும். முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும். பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும். கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும். கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும். நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு


வரி தர மறுத்த வரிப்புலிகள்!! இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம். வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தி லிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.

என். எம். ஆர். சுப்பராமன்:


இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்தவர் ஆவார். "மதுரைகாந்தி" என்று மதுரை மக்களால் அன்போடு அழைக்கபட்டார். மதுரையில் இவர் பெயரில் ஒரு பூங்கா உள்ளது. அவரின் புகழை நிலைநாட்ட என்.எம்.ஆர்.சுப்பராமன் மேம்பாலம் என்று ஒரு மேம்பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனை கட்ட அவருக்கு சொந்தமான இடத்தை வழங்கி உதவினார். மதுரையில் இருக்கும் எத்தனை பேருக்கு இவரை பற்றி தெரியும்?

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தது யார் ?


பிற நாடுகளில் இருந்து நமது நாட்டை இந்தியா என்று அடையாள படுத்தி காட்ட நாம் இன்று பயன்படுத்தும் நமது நாட்டு தேசியக் கொடியை வடிவமைத்தது யார் ? இப்படி ஒரு கேள்வியை நாம் நம் இந்திய சமூகத்தில் வைத்தால் பெரும்பான்மையான மக்கள்மத்தியில் இருந்து வரும் பதில் பிங்காலி வெங்கையா நாயுடு எனபது தான். ஆனால் உண்மையான வரலாற்றை நாம் உற்று நோக்கினால் நமக்கு கிடைக்கும் பதிலோ வேறு.அதை நாம் இங்கு காண்போம் நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..! வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி. ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார். அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி) தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! ) இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின் 'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..! ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh) முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..! வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி. இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி. அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார். மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர். கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார். தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!

Sunday, August 11, 2013

Why mother is so special ?


Why mother is so special : "Why am I so afraid to lose YOU,when You are not even MINE "? When I come home in the rain, Brother asked why didn't you take an umbrella....... Sister advised, Why didn't you wait till rain stopped....... Father angrily warned, only after getting cold, you will realize.... ....! However Mother, while drying my hair, said, stupid rain.....! Couldn't it wait, Till my child come home.......?

எங்களுக்கு எப்ப உலகம் தெரியப் போகுது !


யாழ்ப்பாணத்தில் இன்று முதல் மழை. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் குண்டா கருப்பா அசல் யாழ்ப்பாணத்து முகத்தோட ஒரு பெடியன் வந்து அண்ணை போன்ல பலன்ஸ் இருக்கா எண்டு கேட்டான் ,நானும் நம்பர் அடிச்சு குடுத்தன்,போன் எடுத்து நான் அஜந்தன் கதைக்கிறன் அண்ணை எண்டான் ,(அவன் அண்ணை எண்டு கூப்பிடேக்க அப்பிடியே வந்து ஓட்டுறான் ,அப்பிடியொரு வசியமிருந்தது) இண்டைக்கு தான் புது வேலைக்கு வந்தனான் எண்டான் . மழை . பிறகு கேட்டன், வீட்டுல எத்தன பேர் ?... அப்பா அம்மாவோட சேர்த்து ஏழு பேர் ,நீ எத்தனையாவது பிள்ளை ? முதலாவது அண்ணை ! எத்தின வயசு ? பதினெட்டு அப்பா ? கூலி . எவ்வளவு வரும் ஒரு நாளைக்கு ? ஆயிரத்து நூறு ..இருநூறு . காணுமா,இல்லாட்டி ? கல் உடைக்க போறவர் ஒரு நாளைக்கு ? இல்லை அண்ணை ,ஒரு லோட் உடைச்சா ஆயிரத்து ஐநூறு . (நான் இப்ப தான் யாழ்ப்பாணத்துல கல் உடைக்கிற வேலை இருக்கெண்டு அறிஞ்சன் ) அம்மா ? வயல்ல அறுப்பு வேலைக்கு போவா ஏன் பள்ளிக்கூடம் போகல்ல ? வீட்ட கஷ்டம் அண்ணை . எத்தனையாவது வரைக்கும் படிச்சனீ ? பத்தாம் ஆண்டு ..... (மறுபடியும் போன் ) வேலைக்கு ஆள் எடுத்தாச்சாம் அண்ணை (,சோகமே இல்லை அவன்ட முகத்துல ) சரி என்ன செய்ய போரை? வரேக்க நூறு ரூபா கொண்டு வந்தனான் ,அதுவும் தேங்காய் அதுகள் வாங்க வச்சிருந்த காசு .பஸ் போக வர எண்பது ,அம்மாட்ட வரேக்க வேலைக்கு போனா காசு கொண்டு வாறன் எண்டு சொன்னன், மழை . சரி தம்பி வா நீ போக வேண்டிய இடத்துக்கு கூட்டிக் கொண்டு பொய் விடுறன் . சரி இதில்லாட்டி என்ன செய்வ ? சாப்பாடு கடை ஒண்டு கேட்டவை அண்ணை பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால , சரி சம்பளம் ? பன்னெண்டு தருவாங்கள் ஆனா அங்கயே நிக்கோணும் ,வேற ஒரு வல கடைல கேட்டவங்கள் ,ஆனா முதல் மாசம் சம்பளம் இல்லையாம் . (வேற ஒண்டும் நான் கேக்கேல்ல ) கடைசியா போன், அவன கொண்டு போய் விட்டுட்டு வந்தன் .. எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன என்னை பற்றி நான் அவனுக்கு காசு குடுக்க நினைச்சன் ,ஆனா அது பிச்சையா போய்விடும் அதனால என்ன கட்டுப்படுதிக்கிட்டன் . பிறகு நான் அவன சரியான இடத்தையா கொண்டு போய் சேர்த்தன், என்னை பொறுத்த வரைக்கும் இல்லை . இண்டைக்கு தலைவா வெளியிட, வாசல்ல வெடியெல்லாம் கொளுத்தி பறையடிச்சு வாழை மரம் கட்டின எங்கள் சக சமுதாயம் எப்ப உலகத்த தெரிஞ்சு கொள்ள போகுது . நாங்க எப்பவும் சுயனலமிகளாய் வாழ்ந்தே பழகிட்டம் , எனக்கு மேல பெய்யும் மழை இப்பொழுது குத்துகிறது .

இப்படியும் ஒரு MLA !


*** A.M.H நாஜீம் *** அண்மைகாலமாக ஊழல் குற்றசட்டுக்களில் அதிகம் சிக்கிய திமுகவில் இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும். இவரைப்போல் தமிழகத்தில் வேறு எங்கேனும் ஒரு MLA இருக்கிறாரா என்பதை அறியேன். நல்லது எங்கு இருந்தாலும், அதைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இவரைப் பற்றியப் பதிவு. நான் பார்த்து வியக்கும், ரசிக்கும் ஒரே ஒரு தி மு க MLA, இவர் தான் AMH நாஜீம். 1) காரைக்கால் தெற்கு தொகுதியில் ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாமல் சட்ட மன்ற உறுப்பினராய் நிலைத்து நிற்கும் MLA இவர் ஒருவர் மட்டுமே. இவரின் தொடர் வெற்றிக்கு சாதி, மத ஓட்டுக்கள் என்று எந்த வித குறுக்கு வழியுமில்லை.பணம் சம்பாரிக்க வேண்டியும் இவர் அரசியலுக்கு வரவில்லை. பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வரும் முன்னரே தேவைக்கேற்ற வாழ்வாதாரத்தோடு இருந்தவர். இவர் மக்கள் மனதில் பிடித்த இடம் மட்டும் சற்றும் மங்காமல் இன்று வரை அப்படியே இருக்கிறது. 2) நான் கல்லூரி படிக்கும் காலத்திலேயே , என் தோழியின் சகோதரரின் புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு லட்சம் வரையில் உதவி செய்தார்.அவன் கடைசி காலம் வரை, மருத்துவ உதவிகள் அனைத்திற்கும் செவி சாய்த்தார். 3) கிட்டதட்ட ஐந்து ஆறு வருடங்கள் கழித்து நான் இம்முறை ஊர் சென்ற போதும், அவரின் பெயரும் சேவையும் சற்றும் மாறவில்லை.அப்படியே இருக்கின்றன. 4) 40 வருடங்கள் கழித்து இன்று காரைக்கால் அம்மையார் தெப்பகுளம் புதுபிக்கப் பட்டு ஜொலிக்கிறது. தெப்பத் திருவிழா மீண்டும் நடைபெறுகிறது.இதனை சாதித்ததும் இவர் தான். 5) எங்கள் தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில், கும்பாபிசேகம் நடத்துவதற்காக வசூலிக்கப்பட்ட 3லட்சம் ரூபாய் திருடுபோய்விட்டது. அதில் பாதி தொகையை கொடுத்து உதவி செய்திருக்கிறார். 6) தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை, நாம் செல்லும் அரசாங்க அலுவலகங்களில் நமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை போன்ற எண்ணற்ற முறையீடுகளை நிவர்த்தி செய்கிறார்.இவரை எளிதில் மக்களால் சந்திக்க முடிகிறது.இவரே முன்வந்தும் அடிக்கடி தொகுதி மக்களை சந்திக்கிறார் ( தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல , எல்லா நேரங்களிலும் ) 7)ஆளுங்கட்சி என்ன செய்யுது? யாரை எப்போது குறை சொல்லலாம் என்று பொழுதைக் கழிக்காமல் அட்டவணை முறையில் பணிகளைப் பிரித்து அவர் தொகுதி முன்னேற்றத்தில் கவனம் கொள்கிறார். 8. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு என்று இருக்கும் ஒரே ஒரு அரசு பொறியியல் கல்லூரி PEC (Pondicherry Engineering College) மட்டுமே.அங்கு காரைக்கால் மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் ( general quota ) ஒதுக்கபட்ட இடங்கள் வெறும் 22. வருடத்திற்கு 250 மாணவர்களுக்கு மேல் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் வெறும் 30 அல்லது 40 மாணவர்களால் மட்டுமே அந்த கல்லூரியில் நுழைய முடியும்.இதனை எதிர்த்து முயற்சி செய்து இப்போது காரைக்கால் வேளாண் கல்லோரியிலேயே எங்களுகென்று அரசு பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. 9)இவ்வளவு ஏன் , சிறிது நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்கள் இலங்கைப் படையால் கைது செய்ப்பட்டனர்.இவரின் தலைமையில் நடந்த அறப் போராட்டங்களால் மேலிடங்களுக்கு அழுத்தம் தரப்பட்டு அத்தனை பேரும் விரைவில் மீட்கப்பட்டு ஊர் வந்து சேர்ந்தனர். (இவரின் போராட்டம் மட்டுமே காரணமில்லை , அதுவும் ஒரு காரணம்). இப்போது மீண்டும் 29 மீனவர்கள் இலங்கையில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். 10) அம்மன் கூழ் கசக்குது, நோன்பு கஞ்சி இனிக்குது என்னும் தலைவர்கள் இருக்கும் இதே கட்சியில் தான் இப்படி ஒரு மதச்சார்பற்ற மனிதரும் இருக்கிறார்.இவர் மற்ற மதத்தவருடன் சகஜமாக இருப்பதையும் அவர்கள் கோவில் பூஜையில் கலந்துக் கொள்ளுவதையும் இவர் மதத்தை சேர்ந்த சிலரே தூற்றுகின்றனர். ஒரு மனித நேயமிக்க, தொகுதி மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட சட்ட மன்ற உறுப்பினரைப் பார்ப்பதே அரிதாகி விட்டக் காலத்தில், இவரை ஊக்குவிப்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. ஜாதி, மதங்களைக் கடந்து மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி தான் அரசியல் என்பதை நீங்கள் நம்பினால் இதனை பகிர்ந்து இவரை ஊக்கப்படுத்துங்கள்.

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...


1. காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை 5. குறிஞ்சி 6. வெட்சி 7. செங்கொடுவேரி 8. தேமா (தேமாம்பூ) 9. மணிச்சிகை 10. உந்தூழ் 11. கூவிளம் 12. எறுழ் ( எறுழம்பூ) 13. சுள்ளி 14. கூவிரம் 15. வடவனம் 16. வாகை 17. குடசம் 18. எருவை 19. செருவிளை 20. கருவிளம் 21. பயினி 22. வானி 23. குரவம் 24. பசும்பிடி 25. வகுளம் 26. காயா 27. ஆவிரை 28. வேரல் 29. சூரல் 30. சிறுபூளை 31. குறுநறுங்கண்ணி 32. குருகிலை 33. மருதம் 34.கோங்கம் 35. போங்கம் 36. திலகம் 37. பாதிரி 38. செருந்தி 39. அதிரல் 40. சண்பகம் 41. கரந்தை 42. குளவி 43. மாமரம் (மாம்பூ) 44. தில்லை 45. பாலை 46. முல்லை 47. கஞ்சங்குல்லை 48. பிடவம் 49. செங்கருங்காலி 50. வாழை 51. வள்ளி 52. நெய்தல் 53. தாழை 54. தளவம் 55. தாமரை 56. ஞாழல் 57. மௌவல் 58. கொகுடி 59. சேடல் 60. செம்மல் 61. சிறுசெங்குரலி 62. கோடல் 63. கைதை 64. வழை 65. காஞ்சி 66. கருங்குவளை (மணிக் குலை) 67. பாங்கர் 68. மரவம் 69. தணக்கம் 70. ஈங்கை 71. இலவம் 72. கொன்றை 73. அடும்பு 74. ஆத்தி 75. அவரை 76. பகன்றை 77. பலாசம் 78. பிண்டி 79. வஞ்சி 80. பித்திகம் 81. சிந்துவாரம் 82. தும்பை 83. துழாய் 84. தோன்றி 85. நந்தி 86. நறவம் 87. புன்னாகம் 88. பாரம் 89. பீரம் 90. குருக்கத்தி 91. ஆரம் 92. காழ்வை 93. புன்னை 94. நரந்தம் 95. நாகப்பூ 96. நள்ளிருணாறி 97. குருந்தம் 98. வேங்கை 99. புழகு

Health benefit of Lemon~


Skin: lemons have long been used for their anti-bacterial and anti-viral properties but also come packed with phytochemicals and antioxidants that heal and create healthy, glowing skin. Liver Cleansing: Lemons are helpful in cleansing the liver, which is responsible for processing toxins and hormones. Add a fresh squeezed lemon to your morning water to cleanse and strengthen your immune system. Anti-inflammatory: While lemons are acidic in nature, they are actually "alkaline forming" meaning they become alkaline in your body thus they have been used for their anti-inflammatory properties by arthritis patients, Weight Loss/Cleansing: Lemons are blood purifying fruits, and can aid in digestion. Squeezing lemon onto your food or into your water will help your body properly metabolise a heavy meal. Some scientists even say lemons aid in weight loss. Toothache: Try some lemon juice on the gum area to relieve pain and stop the bleeding. Sunburn: Run some lemon juice on your skin to prevent your skin from getting worse after a burn. They are a natural anti-septic so using lemons on your skin can also help with acne and eczema. Cold/Sore Throat: Lemons are anti-bacterial in nature so squeeze lemon juice into your drink or onto your food if you have a throat infection to help kill bad bacteria and speed up the healing process. (Celery, cucumber, ginger and lemon is a great combo for sore colds and sore throats - blend in a smoothie.

கூடங்குள மின் உற்பத்தி


கூடங்குள மின் உற்பத்திக்கு எதிராக பலர் பல கருத்துக்களை வெளியிடும்போது ஒருவர் வித்தியாசமாக கூடன்குளம் தான் வீட்டுக்கே தேவை இல்லை என்று செயலில் காட்டியுள்ளார். பழைய வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையால் எங்களை அணுகிய அவர் தன்வீட்டு மொத்த மின் தேவைக்குமான மின்சாரத்தை சோலார் மூலம் தயாரிக்கவேண்டும் என்று சொன்னார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அவர், பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை-நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர். ஆனால் இயற்கையை காயபடுத்தகூடாது என்னும் உறுதியுள்ளவர். ஒரு திட்டத்தை மறுக்கும்போது அதற்கான மாற்றுவழியையும் காட்டி மறுக்க வேண்டும். சும்மா பேசிகொண்டிருக்காமல் செயலில் காட்டலாம் என்றுதான் இந்த ஏற்பாடு. இப்போது எங்கள் வீட்டு தேவைக்கான மொத்த மின்சாரத்தையும் சோலார் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து கொள்கிறோம். என் வீடு மின் தேவையில் தன்னிறைவு அடைந்து விட்டதால் எனக்கு அரசின் அணுமின்சாரம் தேவை இல்லை என்கிறார். ரூ. 37,500.00 செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த சோலார் யுபிஎஸ் தினமும் சுமார் 1.5 அலகு மின்சாரம் தயாரிப்பதால், நிலக்கரி மின்சாரம் கணக்குப்படி 3 கிலோ கார்பன்டை ஆக்சைடு வெளியீடு தடுக்கபடுகிறது என்பது கூடுதல் தகவல்.

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:


1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும். 5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம். 6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும். 7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம். 8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது. 9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும். மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன..

இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?


முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம். சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம். 1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும். 2)கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம். 3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும். 4)வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம். 5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும். 6)ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும். 7)அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும். 8)கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது. 9)எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும். 10)முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.