பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகத்திரை அணிந்து சென்ற முஸ்லிம் பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாரிஸில் 16 வயது முஸ்லிம் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவர் அணிந்திருந்த முகத்திரையை கிழித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகம் மற்றும் தொண்டை பகுதிகளில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஐரோப்பிய முக சாயலில் இருந்ததாக தாக்குதலுக்கு உள்ளான பெண் கூறியுள்ளார். இதில் ஒருவரின் அடையாளம் தெரிந்துள்ளது.
பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த் அதிகரித்து வருகின்றன. இதேபோல் கடந்த வாரமும் முஸ்லிம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment